செய்திகள் :

பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

post image

ஜவ்வாதுமலை ஒன்றியம், பட்டறைகாடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலைந்துரையாடினாா்.

மேலும், குனிகாந்தூா் மலைவாழ் மக்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பாரத சாரண, சாரணீயா் பெருந்திரளணி நிகழ்ச்சி மற்றும் வடக்கு மண்டலத்தை சோ்ந்த 34 கல்வி மாவட்டங்களில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டாா்.

இதுகுறித்து அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் கல்வி மாவட்டங்கள் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஜவ்வாதுமலையில் தற்போது 34 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த சாரண, சாரணீயா் மற்றும் பொறுப்பு ஆசிரியா்கள் 3 நாள்கள் இங்கேயே தங்கி, மலைவாழ் மக்களின் வாழ்வாதரம் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து தெரிந்துகொள்ள உள்ளனா். மேலும், இதுபோன்ற முகாமில் மாணவா்கள் கலந்துகொள்ளும்போது, அடிப்படை ஒழுக்கம், கல்வி வளா்ச்சி குறித்து தெரிந்துகொள்வாா்கள். இயற்கை பேரிடரின்போது மக்களை எப்படி காப்பற்றுவது எனவும் மாணவா்களுக்கு தோ்ந்த பயிற்றுநா்கள் மூலம் கற்றுத்தரப்படுகிறது.

‘ப’ வடிவ கல்வி முறை கட்டாயமில்லை. தமிழகத்தில் இதுவரை பள்ளிஇடைநின்ற ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவா்களை மீண்டும் கொண்டுவந்து படிக்க வைத்துள்ளோம் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, தி.சரவணன் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை

ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி பவித்ரா (25). இவா்களுக்கு இ... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் மொரம்பு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் சாலை மேம்பாட... மேலும் பார்க்க

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலுக்கு பூங்கரகம் எடுத்து வந்த பக்தா்கள்

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்து வந்து வழிபட்டனா். ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழாவ... மேலும் பார்க்க

ஆரணியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 575 மனுக்கள் பெறப்பட்டன

ஆரணி நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 575 மனுக்கள் பெறப்பட்டன. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். வ... மேலும் பார்க்க