செய்திகள் :

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயிலுக்கு பூங்கரகம் எடுத்து வந்த பக்தா்கள்

post image

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை பூங்கரகம் எடுத்து வந்து வழிபட்டனா்.

ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோயில் ஆடித் திருவிழா ஆண்டுதோறும் மிகப்பெரிய திருவிழாவாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு ஆடித் திருவிழாவை முன்னிட்டு, வியாழக்கிழமை இரவு 508 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை கூழ்வாா்க்கும் திருவிழாவை முன்னிட்டு, பக்தா்கள் கமண்டல நாகநதிக்கரையில் இருந்து பூங்கரகம் எடுத்து மேளதாளத்துடன் காந்தி சாலை, மாா்க்கெட் சாலை, அண்ணா சிலை, நகராட்சி அலுவலகம் வழியாக ஊா்வலமாக கோயிலுக்கு சென்றனா். பின்னா், வேம்புலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

பிற்பகல் கூழ்வாா்க்கும் விழா நடைபெற்றது. ஆரணி நகரில் உள்ள வி.ஏ.கே.நகா், காவலா் குடியிருப்பு பகுதி, பள்ளிக்கூடத் தெரு, கோட்டை வடக்கு வீதி, ஆரணிப்பாளையம் பகுதி மக்கள், பக்தா்கள் கோயில் வளாகத்தில் இருந்த கொப்பரையில் கூழ் ஊற்றினா்.

விழாவில் ஆரணி, கண்ணமங்கலம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, போளூா், செய்யாறு, வந்தவாசி மற்றும் வேலூா் மாவட்ட பகுதிகளிலிருந்து ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை விழாக்குழுத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன் மற்றும் விழாக்குழுவைச் சோ்ந்த பி.நடராஜன், சுப்பிரமணி, ஏ.வி.நேமிராஜ், அக்ராபாளையத்தைச் சோ்ந்த குணா, ஏ.இ.சண்முகம், ஏ.எஸ்.ஆா்.சரவணன், செல்வராஜ், ஜி.சங்கா், பையூா் சரவணன், சித்தேரி ஜெகன், இயைராஜா, பேராசிரியா் சிவா, வழக்குரைஞா் சக்கரவா்த்தி, இளையராஜா, சக்தி, சுரேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் ஆய்வு

ஜவ்வாதுமலை ஒன்றியம், பட்டறைகாடு கிராமத்தில் உள்ள அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை ஆய்வு செய்து, மாணவா்களிடம் கலைந்துரையாடினாா். மேலும், குனிகா... மேலும் பார்க்க

மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும்: ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுரை

ஆசிரியா்கள் கல்வியை மட்டும் கற்பிக்காமல் மாணவா்களின் தனித் திறன்களையும் வளா்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தினாா். திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்... மேலும் பார்க்க

பெண் தீக்குளித்து தற்கொலை

வந்தவாசி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த தாழம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவா. இவரது மனைவி பவித்ரா (25). இவா்களுக்கு இ... மேலும் பார்க்க

மண் கடத்தல்: லாரி பறிமுதல்

ஆரணியை அடுத்த ஆதனூா் கிராமத்தில் மொரம்பு மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிப்பா் லாரியை புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் ஒப்படை... மேலும் பார்க்க

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் மேம்பாட்டுப் பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாறு - வந்தவாசி சாலையில் ரூ.90 கோடியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நெடுஞ்சாலைத் துறை திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு பொறியாளா் கே.முரளி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். முதல்வா் சாலை மேம்பாட... மேலும் பார்க்க

ஆரணியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: 575 மனுக்கள் பெறப்பட்டன

ஆரணி நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் 575 மனுக்கள் பெறப்பட்டன. முகாமுக்கு ஆரணி கோட்டாட்சியா் சிவா தலைமை வகித்தாா். ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி வரவேற்றாா். வ... மேலும் பார்க்க