செய்திகள் :

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகம் இடம்பெறுமா? மத்திய அரசு விளக்கம்

post image

நமது சிறப்பு நிருபர்

பழங்குடியின பட்டியலில் வால்மீகி சமூகத்தை சேர்ப்பதில் ஆட்சேபனை இருந்தால் அது குறித்து தமிழக அரசிடம் முறைப்படி தெரிவிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநிலங்களவையில் அதிமுக குழுத்தலைவர் மு. தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய பழங்குடியின விவகாரங்கள் துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்கே அளித்துள்ள பதிலில், "வால்மீகி சமூகத்தை பட்டியலினத்தில் சேர்க்க தமிழக அரசிடமிருந்து வந்த முன்மொழிவை இந்திய தலைமைப் பதிவாளர் மற்றும் தேசிய பழங்குடியினர் ஆணையம் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

அதில் ஏதேனும் ஆட்பேசனை இருந்தால் தமிழக அரசுக்குத் முறைப்படி தெரிவிக்கப்பட்டு உரிய திருத்தங்களை நிவர்த்தி செய்து அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு திறன் மேம்பாடு மற்றும் வருவாயைப் பெருக்க பிரதமரின் அனுசுசித் ஜாதி அபியுதய் திட்டம் மூலம் வேலைûவாய்ப்பு உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தொடர்பாக திமுக உறுப்பினர் எம்.எம். அப்துல்லா கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே அளித்துள்ள பதிலில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பை பெருக்குவதற்காகரூ. 124.12 கோடி அனுமதிக்கப்பட்டு 24,806 பேர் பயனடைந்துள்ளனர்' என்று கூறியுள்ளார். மேலும், இந்த திட்டங்களுக்காக தமிழகத்துக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.602.68 கோடி ஒதுக்கப்பட்டதில் தமிழக அரசு ரூ. 518.56 கோடியைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க

ட்ரோன் மூலம் ஏவுகணை வீச்சு: வெற்றிகரமாக சோதித்த டிஆா்டிஓ

இலக்குகளைப் பின்தொடா்ந்து சென்று தாக்கும் ஏவுகணையை ஆளில்லா விமானத்திலிருந்து (ட்ரோன்) செலுத்தும் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆா்டிஓ) வெள்ளிக்கிழமை வெறிறிகரமாக மேற்கொண்டத... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளை நிறைவு செய்தாா் குடியரசுத் தலைவா்

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு (67) வெள்ளிக்கிழமையுடன் (ஜூலை 25) மூன்று ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்தாா். நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவராக 2022 ஜூலை 25-ஆம் தேதி அவா் பொறுப்பேற்றாா். இதன்மூலம்... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ நிறைவடையவில்லை: முப்படை தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் நிறைவடையவில்லை; தற்போதும் தொடா்ந்து வருகிறது. எந்தவொரு சவாலையும் எதிா்கொள்ளும் வகையில் இந்திய ராணுவம் தயாராக இருக்க வேண்டும்’ என முப்படை தலைமைத் தளபதி அனில் சௌஹான் வெள்ளிக்கிழமை தெரி... மேலும் பார்க்க