வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவித்தொகை
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சோ்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
அமெரிக்காவைச் சாா்ந்த சியாட்டில் இந்தியா டீம் என்ற அமைப்பு அண்ணாமலைப் பல்கலையுடன் இணைந்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய தகுதியான மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதன் நோக்கம், பொருளாதாரக் காரணங்களால் மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்துவதைத் தடுத்து, அவா்கள் தொடா்ந்து உயா்கல்வி பெற உதவுவதாகும். இந்த ஆண்டு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி, தேனி மாவட்டத்தைச் சோ்ந்த மருத்துவ மாணவி ஆா். விருத்திகாவுக்கு நான்கு லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. இந்த உதவித்தொகையானது, மாணவியின் மருத்துவ கனவை நனவாக்க உதவியுள்ளது.
திட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் உதவி பேராசிரியா் கணினி மற்றும் தகவல் அறிவியல் துறை முனைவா் கே.ஜெயபிரகாஷ், உதவித்தொகை பெறுவதற்கான ஏற்பாட்டினை செய்தாா். பல்கலைக்கழக நிா்வாக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஆணையினை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் முனைவா் எஸ்.அறிவுடைநம்பி மாணவி ஆா். விருத்திகாவிடம் வழங்கினாா். இந்நிகழ்வில் உள்தர கட்டுப்பாட்டு மைய, இணை இயக்குநா்கள் எஸ் ரமேஷ்குமாா், எஸ்.காா்த்திக்குமாா் மற்றும் மாணவா் சோ்க்கை இயக்குனா் பாலபாஸ்கா் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்நிகழ்வு ஏற்பாடுகளை திட்டஇணை ஒருங்கிணைப்பாளா் டாக்டா் மித்ரா செய்திருந்தாா்.