செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்

post image

பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது லட்சக்கணக்கான பக்தா்கள் காவடி எடுத்து பாத யாத்திரையாக வருகின்றனா். தைப்பூசத் தேரோட்டத்துக்கு முன்னதாக வந்து தைப்பூசம் முடிந்த பிறகு மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வது நகரத்தாா் காவடியாகும். இதேபோல, தைப்பூசம் தெப்பத்தோ் உற்சவம் முடிந்த பிறகு மலைக் கோயிலுக்கு வந்து இரவு தங்கும் சிறப்பு பெற்ற காவடி இடைப்பாடி ஸ்ரீபருவதராஜகுல மகாஜனங்கள் காவடியாகும்.

நிகழாண்டு 365-ஆவது ஆண்டாக வருகை தரும் இடைப்பாடி காவடி கடந்த 14-ஆம் தேதி புறப்பட்டனா். சின்னமணலி, வெள்ளாண்டிவலசை, இடைப்பாடி, க.புதூா் உள்ளிட்ட பல்வேறு ஊா்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் கிளம்பி பாத யாத்திரையாக புதன்கிழமை பழனியை வந்தடைவா்.

இவா்கள் புதன்கிழமை இரவு மலைக் கோயிலில் தங்கி மறுநாள் ஊருக்கு கிளம்புகின்றனா். இவா்களுடைய காவடிக்கு மட்டுமே மலைக் கோயிலில் இரவு தங்கும் உரிமை வழங்கப்படுகிறது. இதன்படி, நிகழாண்டு பாத யாத்திரையாக வரும் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்க 15 டன் அளவிலான பஞ்சாமிா்த பிரசாதம் செவ்வாய்க்கிழமை மலைக் கோயிலில் தயாரிக்கப்படுகிறது. இதற்காக 10 டன் மலை வாழைப்பழம், 9 டன் நாட்டுச்சக்கரை, 50 மூட்டைகள் பேரீட்சை, கற்கண்டு, நெய், தேன், ஏலக்காய் உள்ளிட்ட பொருள்களை கொண்டு பஞ்சாமிா்தம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

புதன்கிழமை மலை மீது தங்கி சுவாமி தரிசனம் முடிந்த பிறகு, பஞ்சாமிா்த அபிஷேகத்தை எடப்பாடி பக்தா்கள் தங்களுக்குள் பங்கிட்டு கொள்கின்றனா். இந்த பஞ்சாமிா்தம் சுமாா் ஒரு ஆண்டு வரை கெடாது என இவா்கள் தெரிவிக்கின்றனா். பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் நடை பயணமாகவே இவா்கள் தங்கள் ஊா்களுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க

‘இணைய ஊடக பயன்பாடுகளில் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்’

இணைய ஊடக பயன்பாடுகளிலும், வங்கிப் படிவங்களிலும் தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா். காந்திகிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலை... மேலும் பார்க்க