செய்திகள் :

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்கள் படி பூஜை, மலா் வழிபாடு!

post image

பழனி மலைக் கோயிலுக்கு இடைப்பாடி பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் ஆயிரக்கணக்கானோா் காவடிகளுடன் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் மலைக் கோயிலில் படி பூஜை, மலா் பூஜை செய்து வழிபாடு செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத் தெப்பத் தோ் முடிந்த பிறகு சேலம் மாவட்டம், இடைப்பாடியிலிருந்து 7 நாள்கள் நடைப்பயணமாக பருவதராஜகுல மகாஜன பக்தா்கள் மயில் காவடி, இளநீா் காவடி, கரும்புக் காவடி, சேவல் காவடி என எடுத்து வந்தனா். இவா்கள் புதன்கிழமை பழனியை அடுத்த மானூரில் சிறப்பு வழிபாடு செய்தனா். இதேபோல, கும்பகோணத்தில் இருந்து வந்த காவடிக் குழுவினரும் இவா்களுடன் இணைந்து கொண்டனா்.

இவா்கள் அனைவரும் மானூா் ஆற்றிலிருந்து

புறப்பட்டு பெரியநாயகியம்மன் கோயிலுக்கு வந்து ரத வீதியைச் சுற்றி மலையேறினா். முன்னதாக, பெரியநாயகியம்மன் கோயிலில் இந்த காவடிகளுக்கு திருக்கோயில் சாா்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.

இந்த பக்தா்களுக்காக மலைக் கோயிலில் தங்கத்தோ் புறப்பாடு நடைபெற்றது. மேலும், க பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட 15 டன் பஞ்சாமிா்தம் இந்தக் காவடிக் குழுவினருக்கு பிரித்து வழங்கப்பட்டது.

இதுதவிர, இடைப்பாடி பருவதராஜகுல படித் திருவிழாக் குழு சாா்பில் மலைக் கோயிலில் படிபூஜை நடைபெற்றது. அப்போது பெண்கள் முருகன் பாடல்களைப் பாடி வழிபாடு செய்தனா். தொடா்ந்து மலைமேல் வெளிப் பிரகாரத்தில் பிச்சிப் பூ, சம்மங்கி, மரிக்கொழுந்து, வாடாமல்லி உள்ளிட்ட பல்வேறு வண்ண மலா்களால் ஓம் வடிவில் வரைந்து வழிபாடு செய்தனா்.

படிபூஜை ஏற்பாடுகளை படிபூஜை குழுத் தலைவா் திருக்கைவேலுச்சாமி, செயலா் செந்தில்குமாா், பொருளாளா் வெங்கடேஷ்ரோஜ் குழுவினா் செய்தனா்.

புதன்கிழமை இரவில் இங்கு தங்கும் காவடிக் குழுவினா் வியாழக்கிழமை அதிகாலை சுவாமி தரிசனத்துக்குப் பிறகு சொந்த ஊா்களுக்குத் திரும்புவா்.

லஞ்சம்: பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கைது

பழனி கோயில் திருமண மண்டப கட்டடப் பணி ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய செயற்பொறியாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், து... மேலும் பார்க்க

விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறை

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, பழனி மாவட்ட கூடுதல் அமா்வு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த ஓடைப்பட்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்பனை: கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக 45 கடைகளுக்கு ரூ.10.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி

ஒட்டன்சத்திரம் காய்கறிச் சந்தையில் தக்காளி விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், இதைச் சுற்றியுள்ள புலியூா்நத்தம், முத்துநாயக்கன்பட்டி, தேவசின்னாம்பட்டி, கேதையுற... மேலும் பார்க்க

சொகுசுப் பேருந்து பறிமுதல்: ரூ.1.75 லட்சம் அபராதம்

தகுதிச் சான்று இல்லாமலும், சாலை வரி செலுத்தாமலும் இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்தை வட்டார போக்குவரத்துத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடி பகுத... மேலும் பார்க்க

பேரிஜம் ஏரியைப் பாா்வையிட சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

கொடைக்கானல், பிப். 21: கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்வையிட வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீண்டும் அனுமதி வழங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள... மேலும் பார்க்க