அமெரிக்காவில் போதைப்பொருள் விவகாரம்! தொடர்புடைய இந்தியர்கள் விசாவுக்கு தடை!
பழனி ரோப்காா் சேவை நாளை நிறுத்தம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் ரோப்காா் சேவை பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (செப்.19) நிறுத்தப்படவுள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய படிவழி, யானைப் பாதை, வின்ச் பாதைக்கு மாற்றாக ரோப்காா் சேவை இயக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணிவரை இயக்கப்படும் இந்த ரோப்காா் சேவை மதியம் ஒரு மணி நேரமும், மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதமும் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் பழனி ரோப்காா் சேவை மாதாந்திரப் பராமரிப்புப் பணிக்காக நிறுத்தப்படுகிறது என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.