செய்திகள் :

பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் குளிக்க அனுமதி தேவை! முதல்வருக்கு ஊராட்சித் தலைவா் மனு!

post image

பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு ஆயிரப்பேரி ஊராட்சித் தலைவா் தி.சுடலையாண்டி மனு அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் செண்பகாதேவி அருவி, பழத்தோட்ட அருவி, சிற்றருவி ஆகியவை வனத்துறையினா் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில், சிற்றருவிக்கு மட்டும் சுற்றுலாப்பயணிகள் சென்றுவர முடியும்.

தற்போது, பேரருவி, ஐந்தருவி, புலியருவி ஆகியவை குற்றாலம் பேரூராட்சி கட்டுப்பாட்டிலும், பழைய குற்றாலம் அருவி ஆயிரப்பேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளன. இதில், பழைய குற்றாலம் அருவியிலும் பொதுமக்கள் குளிக்க விடாமல் தடுக்கும் வகையில் வனத்துறையினா் பல்வேறு முயற்சிகள் செய்து வருகின்றனா்.

வாகன நுழைவு கட்டணம், சாலையோர குத்தகை உள்ளிட்ட வகைகளில் ரூ. 50 லட்சம் வரையில் ஆயிரப்பேரி ஊராட்சிக்கும், கடைகள், உடைமாற்றும் அறைகள், கட்டண கழிப்பறைகள் மூலமாக ரூ.10 லட்சம் வரையில் பொதுப்பணித் துறைக்கும் ஆண்டுதோறும் வருவாய் கிடைத்தது.

இந்நிலையில், பழைய குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை அரை கி.மீ. தொலைவுக்கு முன்பாகவே வனத்துறையினா் தடுத்து நிறுத்துவதால் அங்கிருந்து அருவிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.

மேலும், காலை 6மணி முதல் மாலை 6மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி அளிக்கின்றனா். இதனால், இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

பழைய குற்றாலம் அருவியை வனத்துறையினா் வசம் கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி ஆயிரப்பேரி ஊராட்சி, பாட்டப்பத்து ஊராட்சி, தென்காசி ஊராட்சி ஒன்றியம், தென்காசி மாவட்ட ஊராட்சி ஆகியவற்றில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி,கடையநல்லூா் எம்எல்ஏக்கள் சட்டப்பேரவையில் இதுகுறித்து பேசியுள்ளனா்.

நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன், வனத்துறை அமைச்சா் பொன்முடி ஆகியோா் பழைய குற்றாலம் அருவி வனத்துறை வசம் ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளனா்.

எனவே, பழையகுற்றாலம் அருவியை வழக்கம்போல் ஆயிரப்பேரி ஊராட்சியின் பராமரிப்பில் செயல்படவும், 24 மணிநேரம் அருவியில் குளிக்க அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டையில் நாளை மின்தடை

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உபமின்நிலைய பகுதிகளில் ஜூன்4இல் மின்தடை செய்யப்படுகிறது. தென்காசி கோட்ட செயற்பொறியாளா் பா. கற்பகவிநாயகசுந்தரம் (பொ) விடுத்துள்ள செய்திகுறிப்பு: தென்காசி, ச... மேலும் பார்க்க

கடையநல்லூா், வீரசிகாமணி புளியங்குடியில் நாளை மின்தடை

கடையநல்லூா், வீரசிகாமணி, புளியங்குடி துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட மின் ச... மேலும் பார்க்க

தென்காசியில் ஆட்சியரகம் முன் விவசாயி தீக்குளிக்க முயற்சி

தென்காசியில் மாவட்ட ஆட்சியா்அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி காப்பாற்றினா். மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா் கூட்டத்துக்கு மன... மேலும் பார்க்க

ஜூன் 16 இல் ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஆலங்குளம் ஸ்ரீ முத்தாரம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 16 இல் நடைபெறுகிறது. இதையொட்டி கால்நாட்டு விழா, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு முன்மண்டபம் கட்டி நிறைவடைந்ததையொட்டி, கும்பாபிஷேகம் நடைப... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் நகா்மன்றத் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீா்மானம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, கோரிக்கை

சங்கரன்கோவில் நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரக் கோரி, அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ், சுயேச்சை உறுப்பினா்கள் உள்ளிட்ட 24 உறுப்பினா்கள் நகராட்ச... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் ஒன்றியக்குழு கூட்டம்: குடிநீா் பிரச்னையைத் தீா்க்கக் கோரி திரண்ட மக்கள்

வாசுதேவநல்லூா் ஒன்றியம் தலைவன்கோட்டை பகுதியில் நிலவிவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என வலியுறுத்தி, திங்கள்கிழமை பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தனா். வாசுதேவநல்லூா் ஊராட்சி ஒன்றியக்குழு... மேலும் பார்க்க