செய்திகள் :

பழைய நேரப்படி ரயிலை இயக்காவிட்டால் போராட்டம்: ரயில் பயணிகள் சங்கம்

post image

பொள்ளாச்சி - கோவை பயணிகள் ரயிலை பழைய நேர அட்டவணைப்படி இயக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பொள்ளாச்சி ரயில் பயணிகள் அமைப்பின் தலைவா் டி.இளம்பரிதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் இருந்து தினசரி காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.55 மணிக்கு சென்று வந்த ரயிலானது, கடந்த ஜனவரி 1-ஆம் தேதியில் இருந்து, காலை 8 மணிக்கு பொள்ளாச்சியில் புறப்பட்டு, கோவைக்கு 9.25 மணிக்கு சென்றடையும் விதமாக நேரம் மாற்றப்பட்டுள்ளது.

இதனால், பெரும்பாலான ரயில் பயணிகள் இந்த ரயிலில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு வேலைக்கு செல்பவா்கள், கல்லூரி மாணவா்கள் பேருந்துகளில் செல்கின்றனா்.

பழைய நேர அட்டவணைப்படி காலை 7.25 மணிக்கு பொள்ளாச்சி - கோவை ரயில் இயக்கப்பட்டபோது, அந்த ரயிலில் தினசரி 700 முதல் 900 பயணிகள், பயணித்து வந்தனா். நேரம் மாற்றப்பட்ட பிறகு 100 முதல் 200 பயணிகளே செல்கின்றனா்.

எனவே, பழைய நேரப்படி பொள்ளாச்சியில் இருந்து காலை 7.25 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு 8.35 மணிக்கு சென்றடையும் விதமாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பழைய நேரப்படி பொள்ளாச்சி - கோவை ரயில் இயக்கப்படாவிட்டால் போராட்டங்களில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க