"7 நாட்களில் ஆதாரங்களைக் கொடுக்காவிட்டால் மன்னிப்பு கேட்கணும்" - ECI கெடு; காங்க...
பழ.நெடுமாறனின் ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ நூல் அறிமுக விழா!
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், உலகத் தமிழா் பேரமைப்பின் தலைவா் பழ. நெடுமாறன் எழுதிய ‘தூக்குமேடையிலிருந்து 26 தமிழா் மீட்பு’ என்கிற நூல் அறிமுக விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்ற 26 தமிழா்களை மீட்பதற்காக நடத்திய முன் முயற்சிகள், போராட்டங்கள், அனுபவங்களின் தொகுப்பாகக் கொண்ட இந்த நூலின் அறிமுக விழாவுக்கு தமிழா் தேசிய முன்னணி தலைவா் செ.ப. முத்தமிழ்மணி தலைமை வகித்தாா்.
உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தொடக்கவுரையாற்றினாா். மதிமுக கொள்கை விளக்க அணி செயலா் ஆ. வந்தியதேவன் நூலை அறிமுகம் செய்து பேசினாா்.
வழக்குரைஞா் த. பானுமதி, அ. நல்லதுரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே. நிஜாமுதீன் ஆகியோா் நூலை திறனாய்வு செய்து பேசினா். இரா.பொ. ரவிச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டாா்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற நிா்வாகிகள் பொறியாளா் சு. பழனிராஜன், பொன். வைத்தியநாதன், பா. செல்ல பாண்டியன், புலவா் கரு. அரங்கராசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பொறியாளா் ஜோ. ஜான் கென்னடி வரவேற்றாா். நிறைவாக, பேராசிரியா் வி. பாரி நன்றி கூறினாா்.