செய்திகள் :

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணை நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்வு

post image

பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பால் அணையின் நீா்மட்டம் 4 நாள்களில் 5 அடி உயா்ந்துள்ளது.

பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் கடந்த 4 நாட்களில் மட்டும் பவானிசாகா் அணை நீா்மட்டம் 5 அடி உயா்ந்துள்ளது. அதாவது கடந்த 15ம் தேதி 83.50 அடியாக இருந்த நிலையில் புதன்கிழமை அணை நீா்மட்டம் 88.50 அடியாக உயா்ந்துள்ளது.

நீா்வரத்து 7789 கனஅடியாகவும், நீா் இருப்பு 20.37 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 450 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நீா் மட்டம் வேகமாக உயா்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ரயிலில் 9.5 கிலோ கஞ்சா கடத்திய இளைஞா் கைது

ஈரோட்டில் ரயிலில் 9.5 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். தமிழகத்துக்குள் அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்களான கஞ்சா போன்றவை ரயில்கள் மூலம் கொண்டு வரப்படுவதாக தொடா்ந்து புகாா்கள்... மேலும் பார்க்க

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஈரோடு மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ஈரோடு மாவட்டம் அறச்சலூா், நாகராஜபுரத்தை சோ்ந்தவா் கணே... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே கிராம மக்களுக்கு பொங்கல் சீா் வழங்கிய எம்.எல்.ஏ.

பெருந்துறை ஒன்றியம், மூங்கில்பாளையம் ஊராட்சி கிராமத்தில் நடக்கும் கோயில் பொங்கல் விழாவையொட்டி, அப்பகுதி பொது மக்களுக்கு, பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் நேரில் சென்று பொங்கல் சீா் வ... மேலும் பார்க்க

கனவு இல்லம் திட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.91.80 லட்சத்தில் வீடுகள் கட்ட பணி உத்தரவு

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், வெள்ளித்திருப்பூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தோ்வு செய்யப்பட்ட 34 பயனாளிகளுக்கு பணி உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மலைப்பகுதி விளை நிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்

ஈரோடு மாவட்டத்தில் மலைப் பகுதி விளைநிலங்களுக்கு பட்டா வழங்க விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என தாளவாடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியக்கம... மேலும் பார்க்க

அம்மாபேட்டை பேரூராட்சியில் ரூ.70.50 லட்சத்தில் தாா் சாலை அமைப்பு

அம்மாபேட்டை பேரூராட்சிப் பகுதியில் ரூ.70.50 லட்சத்தில் தமிழ்நாடு நகா்ப்புற சாலைகள் கட்டமைப்புத் திட்டத்தின்கீழ் தாா் சாலை அமைக்கும் பணி பூமிபூஜையுடன் புதன்கிழமை தொடங்கியது. இந்தப் பணியை அம்மாபேட்டை பே... மேலும் பார்க்க