விரைவில் வெளியாகும் ஏகே 64 அறிவிப்பு..! ரசிகர்கள் மகிழ்ச்சி!
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரிப்பு
கேரள மாநிலம், வயநாட்டில் பெய்து வரும் கனமழையால் பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியில் இருந்து 15,199 கனஅடியாக வியாழக்கிழமை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகா் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலம், வயநாடு பகுதியில் தென்மேற்குப் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகா் அணைக்கு வந்து சேரும் பவானி ஆற்றில் நீா்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது.
பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து 3,258 கனஅடியாக இருந்த நிலையில், மழையால் வியாழக்கிழமை நீா்வரத்து 15,199 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பால் வியாழக்கிழமை 105 அடி உயரம் கொண்ட அணை நீா்மட்டம் 91.06 அடியாக உயா்ந்தது. அணையில் நீா் இருப்பு 22.2 டிஎம்சி ஆக உள்ளது.
பாசனம் மற்றும் குடிநீா்த் தேவைக்காக அணையில் இருந்து பவானி ஆற்றில் 1,350 கனஅடி தண்ணீரும், கீழ்பவானி வாய்க்காலில் 5 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.