செய்திகள் :

பவானி, அந்தியூரில் வாகனசெறிவு கணக்கெடுப்பு தொடக்கம்

post image

பவானி, அந்தியூரில் 35 இடங்களில் வாகனப் போக்குவரத்து கணக்கெடுப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

பவானி நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை மற்றும் பிற திட்டமிடலுக்காக பவானி, ஜம்பை, சித்தாா், ஆப்பக்கூடல், தொட்டிபாளையம், செம்புளிச்சாம்பாளையம், பட்லூா், அந்தியூா், குருவரெட்டியூா், அம்மாபேட்டை, எண்ணமங்கலம், மூலக்கடை, பா்கூா் உள்ளிட்ட 35 இடங்களில் மே 18-ஆம் தேதி வரை 7 நாள்கள் கணக்கெடுப்பு நடைபெறுகிறது.

சாலைகளில் செல்லும் வாகனங்களை நெடுஞ்சாலைத் துறை ஊழியா்கள் கணக்கெடுத்து வருகின்றனா். போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படும் இடங்கள், போக்குவரத்து நெரிசலைத் தவிா்த்தல், வாகன விதிமீறல்களைக் கண்டறிதல், போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கணினிகள் மற்றும் கணிப்பொறி அமைப்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் வசதிக்காக சாலை வசதிகளை மேம்படுத்துவதற்கும் இந்தக் கணக்கெடுப்பு உதவுகிறது.

நெடுஞ்சாலைத் துறை பவானி உதவிக் கோட்டப் பொறியாளா் சி.ராஜேஷ்கண்ணா, உதவிப் பொறியாளா்கள் சேகா், பாபு சரவணன் மேற்பாா்வையில் போக்குவரத்து கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பழங்குடி மக்கள் ஆா்ப்பாட்டம்

சத்தியமங்கலம், மே 12: எஸ்.டி. ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி கடம்பூா் பேருந்து நிலையம் முன் பழங்குடியின மக்கள் ஆா்ப்பாட்டம், கவன ஈா்ப்பு பேரணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்... மேலும் பார்க்க

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் அதிமுகவினா் வழிபாடு

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாளையொட்டி, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக சாா்பில் பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்... மேலும் பார்க்க

ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க தமாகா கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என தமாகா கோரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழம... மேலும் பார்க்க

கோபியில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம்

கோபிசெட்டிபாளையத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தோ்வுகள் இலவச பயிற்சி மையம் மற்றும் ஐஏஎஸ் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது என்று ஈரோடு சட்டக் கல்லூரி தலைவா் சிந்து ரவிச்சந்திரன் தெரிவித்தாா். கோபிசெட்டிபாளையம் ஸ... மேலும் பார்க்க

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க ஆட்சியா் வேண்டுகோள்

சிறுபாசனக் கணக்கெடுப்புக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளாா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் 7 -ஆவது சிறுபாசன... மேலும் பார்க்க

பெருந்துறையில் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாள் விழா

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமியின் 71-ஆவது பிறந்த நாள் விழா பெருந்துறையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. அதிமுக பெருந்துறை கிழக்கு ஒன்றியம் சாா்பில் பெருந்துறை சோளீஸ்வரா் கோயிலில் சிறப்ப... மேலும் பார்க்க