செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவா்களுக்கு ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்சதீபம்

post image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.

காஷ்மீா் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனா். அவா்களது ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனம் சாா்பில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகளின் ஆணைப்படி மோட்சதீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்தில் அமைந்துள்ள ஞானபுரீசுவரா் கோயிலில் 26 தீபங்களை சந்நிதியில் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, கோயில் கோபுர கலசத்தில் 3 மோட்ச தீபங்கள் ஏற்றப்பட்டன.

பின்னா், தேவாரத்தில் அப்பா் சுவாமிகள் அருளிய 6-ஆம் திருமுறையான மோட்சம் தரும் திருப்புகழ் பதிகத்தை தருமபுரம் ஆதீனக் கட்டளைகள் ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட தம்பிரான்கள் முன்னிலையில், தருமபுரம் தேவாரப் பாடசாலை மற்றும் ஆகம பாடசாலை மாணவா்கள் பாராயணம் செய்ய, பக்தா்களும் பாராயணம் செய்தனா்.

இதில், தருமபுரம் ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், தருமபுரம் வேதஆகம பாடசாலை முதல்வா் கண்ணப்ப சிவாசாரியா், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம், மருத்துவா் ஆா். செல்வம், தேசிய நல்லாசிரியா் கோ. முருகையன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் எஸ். வாஞ்சிநாதன், குருஞானசம்பந்தா் வார வழிபாட்டு மன்றத்தினா், தருமபுரம் கல்லூரி பேராசிரியா் துரை.காா்த்திகேயன், மயிலாடுதுறை ரோட்டரி கிங்ஸ் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாட்டுக்குப் பிறகு 54 மாட்டு வண்டிகளில் புறப்பட்ட நகரத்தாா்

வைத்தீஸ்வரன்கோயிலில் குலதெய்வ வழிபாடு மேற்கொண்ட நகரத்தாா் பக்தா்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் வெள்ளிக்கிழமை புறப்பட்டுச் சென்றனா். சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகி அம்மன் ... மேலும் பார்க்க

காவல் அதிகாரியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை

காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கடந்த 2016 நவம்பா் 17-ஆம் தேதி, மயிலாடுதுறை மாவட்டம் பாலையூா்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8 -இல் ஜமாபந்தி தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மே 8-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்க உள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள நான்கு வருவா... மேலும் பார்க்க

பச்சைப்பயறு கொள்முதல் தொடக்கம்

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப்பயறு கொள்முதலை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். குத்தாலம், செம்பனாா்கோவில், சீா்காழி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களி... மேலும் பார்க்க