செய்திகள் :

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

post image

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக நடவடிக்கைகளை அறிவித்து வருவதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் முக்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தக் கூட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல்கள், மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் நாளை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

பஹல்காம் தாக்குதல்நாளை(ஏப்30அமைச்சரவைக் கூட்டம்!

மே 29-ல் விண்வெளி மையத்துக்குச் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா மே 29-ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கிறாா். அமெரிக்காவின் புளோரிடாவில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் பெல்கான் ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: முப்படைகளுக்கு முழு சுதந்திரம் - மோடி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடா்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமா் நரேந்திர மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளார். மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு!

பிரதமர் நரேந்திர மோடியை அவரின் இல்லத்திற்குச் சென்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு இந்தியாவ... மேலும் பார்க்க

மே 14-ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பதவியேற்கிறார் பி.ஆர். கவாய்!

உச்சநீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக மே 14 ஆம் தேதி, பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்கிறார்.புதிய தலைமை நீதிபதியாக கவாய் பெயரை தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்திருந்தார். இந்தப... மேலும் பார்க்க

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தானம்!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் தனிப்பட்ட ஆவணங்கள் தேசிய ஆவணக் காப்பகத்திற்கு அவரது குடும்பத்தினரால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், ஏவுகணை நாயகன் என... மேலும் பார்க்க

ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்கும் பாக்., முன்னாள் எம்.பி.! இந்தியாவில் இருக்க அனுமதி!

பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. தபயா ராம், ஹரியாணாவில் ஐஸ்கிரீம் விற்று தனது குடும்பத்தை கவனித்து வருகிறார். இவரின் குடும்பத்தில் 34 உறுப்பினர்கள் உள்ள நிலையில், 6 பேர் மட்டுமே இந்தியக் குடியுரி... மேலும் பார்க்க