செய்திகள் :

பாகிஸ்தானில் ஒரே நாளில் 30 பேர் பலி: "மழைக்கால அவசரநிலை" அறிவிப்பு!

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பருவமழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் பலியாகியுள்ள நிலையில் மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலையை" அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது,

லாகூரிலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவில் உள்ள உப்பு நீர்த்தேக்கப் பகுதியான சக்வால் கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதியாகும். கடந்த 24 மணி நேரத்தில் 423 மிமீ. மழை அவசரநிலையை அறிவித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சக்வாலில் திடீர் வெள்ளத்தால் சிக்கிய மக்களை வெளியேற்ற ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாகாணம் முழுவதும் வியாழக்கிழமையான இன்றும் பருவமழை தொடரும் என்பதால் பஞ்சாப் முழுவதும் ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்ததை அடுத்து, பாகிஸ்தான் முழுவதும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் 26ஆம் தேதி முதல் பருவமழை தொடங்கியதிலிருந்து பஞ்சாபில் இந்த இறப்புகள் பதிவாகியுள்ளன.

லாகூர், பைசலாபாத், ஒகாரா, சாஹிவால், பாக்பட்டான் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் மழை தொடர்பான சம்பவங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் இறந்ததைத் தவிர, பஞ்சாப் முழுவதும் 300 பேர் காயமடைந்துள்ளதாகவும், பெரும்பாலான இறப்புகள் லாகூர், பைசலாபாத், ஒகாரா, சாஹிவால், பாக்பட்டான் மற்றும் சக்வால் ஆகிய இடங்களில் நிகழ்ந்துள்ளதாகவும் பேரிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தப் பகுதிகளில் 125க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது. இதற்கிடையில், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், ராவல்பிண்டி உள்பட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் "மழை அவசரநிலையை" அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

மோசமடைந்து வரும் வெள்ள சூழ்நிலையிலிருந்து மக்களைப் பாதுகாக்க மாகாணம் முழுவதும் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் மீட்பு துறை உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய துறைகளும் சம்பவ இடத்திற்கு உள்ளதாகவும் பஞ்சாப் அரசு அறிக்கை தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வைக்கப்பட்டுள்ளன, மேலும் கள மருத்துவமனைகள் மற்றும் பிற மருத்துவ வசதிகள் மக்களுக்கு உதவ முழுமையாகத் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Torrential monsoon rains claimed 30 lives in Pakistan's Punjab over the last 24 hours, prompting the provincial government to declare “rain emergency” in different parts, officials said on Thursday.

ரஷியா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மீட்கும் ரஷிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) முத்தரப்பு ஒத்துழைப்பை மீட்டெடுக்க ரஷியா எடுத்துள்ள முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ‘இந்த ஒத்துழைப்பு 3 நாடுகளின் சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இணைந்த சுக்லா!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் மனைவி, மகனுடன் இணைந்தாா். இதனிடைய... மேலும் பார்க்க

பருவமழை: பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடா் பருவமழையால் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பேரிடரில் ஒட்டுமொத்த... மேலும் பார்க்க

இலங்கை: புதைகுழியில் 65 சிறுமிகளின் எலும்புகள்

இலங்கையின் செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுதல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதையுண்டிருந்ததாக ... மேலும் பார்க்க

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க