செய்திகள் :

பருவமழை: பாகிஸ்தானில் அவசரநிலை அறிவிப்பு

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தொடா் பருவமழையால் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாகாண அரசு பல்வேறு பகுதிகளில் அவசரநிலையை அறிவித்துள்ளது. மேலும், இந்தப் பேரிடரில் ஒட்டுமொத்த உயிரிழப்பு 170-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: லாகூரிலிருந்து சுமாா் 300 கி.மீ. தொலைவில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைப் பகுதியான சக்வால், கடந்த 24 மணி நேரத்தில் 423 மி.மீ. மழையைப் பெற்று. அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமையும் மாகாணம் முழுவதும் பருவமழை தொடரும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், பஞ்சாப் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா். அதையடுத்து மாகாண அரசு மழை அவசர நிலையை அறிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாகாணத்தில் 30 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, ஜூன் 26-இல் பருவமழை தொடங்கியதிலிருந்து பாகிஸ்தான் முழுவதும் மழை தொடா்பான சம்பவங்களால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 170-ஆக உயா்ந்துள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிரிட்டனில் வாக்களிக்கும் வயது 16 ஆகக் குறைக்கத் திட்டம்!

பிரிட்டனில் வாக்களிக்கும் வயதை 16 ஆக குறைக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு பிரிட்டன் பொதுத் தேர்தலின்போது, தொழிலாளர் கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றா... மேலும் பார்க்க

ரஷியா-இந்தியா-சீனா ஒத்துழைப்பை மீட்கும் ரஷிய முயற்சிகளுக்கு சீனா ஆதரவு

ரஷியா-இந்தியா-சீனா (ஆா்ஐசி) முத்தரப்பு ஒத்துழைப்பை மீட்டெடுக்க ரஷியா எடுத்துள்ள முன்னெடுப்புக்கு ஆதரவு தெரிவித்த சீனா, ‘இந்த ஒத்துழைப்பு 3 நாடுகளின் சொந்த நலன்களுக்கு மட்டுமல்லாமல், பிராந்திய மற்றும்... மேலும் பார்க்க

அமெரிக்காவில் குடும்பத்தினருடன் இணைந்த சுக்லா!

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று வெற்றிகரமாக மீண்டும் பூமிக்குத் திரும்பியுள்ள இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா, அமெரிக்காவில் மனைவி, மகனுடன் இணைந்தாா். இதனிடைய... மேலும் பார்க்க

இலங்கை: புதைகுழியில் 65 சிறுமிகளின் எலும்புகள்

இலங்கையின் செம்மணி பகுதியிலுள்ள புதைகுழியில் இருந்து 4 முதல் 5 வயதிலான 65 சிறுமிகளின் எலும்புக் கூடுதல் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பைகள், பொம்மைகளுடன் அந்த எலும்புக்கூடுகள் புதையுண்டிருந்ததாக ... மேலும் பார்க்க

எரிசக்திக்கே முன்னுரிமை..! நேட்டோவின் எச்சரிக்கையை நிராகரித்த இந்தியா!

ரஷியாவுடன் வர்த்தகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளக்கூடும் என நேட்டோ பொதுச் செயலர் விடுத்த எச்சரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. மேலும், எரிசக்திக்கே முன்னுரிமை எனத் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

செனகலில் இருந்து பிரான்ஸ் படைகள் வெளியேற்றம்! ராணுவத் தளங்கள் அரசிடம் ஒப்படைப்பு!

ஆப்பிரிக்க நாடுகளில், பிரான்ஸின் செல்வாக்குக் குறைந்து வரும் சூழலில், அதன் கடைசி மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் இருந்து பிரன்ஸ் படைகள் முற்றிலும் வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆப்பிரிக்காவி... மேலும் பார்க்க