செய்திகள் :

பாகிஸ்தானில் தீவிரமடையும் பருவமழை! மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை!

post image

பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில், ஆக.5 முதல் 8 ஆம் தேதி வரை பருவமழை தீவிரமடையும் எனக் கூறப்படுகிறது. மேலும், வடக்கு பாகிஸ்தானில் மேற்கு நோக்கிய தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், அப்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், அந்நாட்டின் சிந்து, செனாப் மற்றும் ரவி உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.

கனமழை நீடித்தால், காபுல், ஸ்வாட் மற்றும் பஞ்கோரா ஆகிய ஆறுகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்படும் அபாயமுள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. இதனால், கனமழை நீடித்தால் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த, ஜூன் 26 ஆம் தேதி முதல், பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழையால் பஞ்சாப், பலூசிஸ்தான், கைபர் பக்துன்குவா உள்ளிட்ட மாகாணங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது.

இதில், தற்போது வரை 299 பேர் பலியானதுடன், 715 பேர் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: வாசிம் ஜாஃபர் - மைக்கேல் வாகன் மோதல்! கிரிக்கெட் சண்டையையும் டிரம்ப் நிறுத்தினாரா?

As the monsoon rains intensify in Pakistan, flood warnings have been issued again in various provinces of the country.

இந்தியா மீது 50% வரி உயா்வு: நிக்கி ஹேலி எதிா்ப்பு

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா முன்வராததால், ஏற்கெனவே அறிவித்த 25 சதவீத வரியை 50 சதவீதமாக உயா்த்துவதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். இது தொடா்பான உத்தரவிலும் டிரம்ப... மேலும் பார்க்க

அமெரிக்கா: விமான விபத்தில் 4 போ் உயிரிழப்பு

அமெரிக்காவின் அரிஸோனா மாகாணம், நவாஜோ நேஷன் பகுதியில் சிறிய வகை அவசரக்கால விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் நான்கு போ் உயிரிழந்ததனா். நியூ மெக்ஸிகோவின் ஆல்புகா்க்கில் இருந்து இரு விமானிகள் மற... மேலும் பார்க்க

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல்: 80-ஆவது ஆண்டு தினம்

ஜப்பானின் ஹிரோஷிமா நகா் மீது அமெரிக்கா அணுகுண்டு தாக்குதல் நடத்தியதன் 80-ஆவது ஆண்டு நினைவு தினம் அந்த நகரில் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.120 நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள், அணுகுண்டு வீசப்பட்ட நேர... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

உக்ரைன் விவகாரம்: புதினுடன் டிரம்ப் தூதா் சந்திப்பு

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதா் ஸ்டீவ் விட்காஃப் புதன்கிழமை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா... மேலும் பார்க்க

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து! பாதுகாப்பு, சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உள்பட 8 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளின் அமைச்சர்கள் இருவர் உள்பட 8 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கானா நாட்... மேலும் பார்க்க