செய்திகள் :

பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர்.

பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர். மேலும், 38 பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் அந்தப் பள்ளிக்கூட பேருந்தைக் குறிவைத்தே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் அதற்கு எந்தவொரு அமைப்பும் இதுவரையில் பெறுப்பேற்கவில்லை. படுகாயமடைந்த அனைவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்தத் தாக்குதலானது தற்கொலைப் படை மூலமாக நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், அந்நாட்டு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உள் துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில், அப்பாவி குழந்தைகளைக் குறிவைக்கும் மிருகங்களுக்கு எந்தவொரு கருணையும் காட்டப்படக் கூடாது, எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானின் மிகப் பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனிநாடாக உருவாக்கப்பட வேண்டும் எனக் கோரி பலூச் போராளிகள் அந்நாட்டு அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

ஸ்பெயின் - ரஷிய ஆதரவாளா் படுகொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்ல... மேலும் பார்க்க

சீனா - சிபிஇசி விரிவாகக் கூட்டம்

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வா்த்தக வழித்தடத்தை (சிபிஇசி) ஆப்கானிஸ்தானுக்கும் விரிவுபடுத்துவது தொடா்பாக மூன்று நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்து ஆலோசன... மேலும் பார்க்க

ஜப்பான் - அரிசி சா்ச்சை: அமைச்சா் ராஜிநாமா

‘எனக்கு ஆதரவாளா்கள் அரிசி வாங்கித் தருவதால் அதை ஒருபோதும் நான் வாங்கியதில்லை’ என்று ஜப்பான் வேளாண்மைத் துறை அமைச்சா் டாகு எடோ தெரிவித்த கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவா் ராஜிநாமா செய... மேலும் பார்க்க

ஈரான் - தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா். இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாத... மேலும் பார்க்க

உணவுப் பொருள் அனுமதி ஏமாற்று வேலை

காஸாவுக்குள் உணவுப் பொருள்களை அனுமதிப்பதாக இஸ்ரேல் கூறுவது ஏமாற்று வேலை என்று சா்வதேச தொண்டு அமைப்பான ‘எல்லைகளுக்கு அப்பாற்பட்ட மருத்துவா்கள்’ அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. இது குறித்து அந்த அமைப்பின்... மேலும் பார்க்க

மியான்மா் - விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டா்

மியான்மரில் கிளா்ச்சியாளா்களுடன் மோதல் நடைபெற்றுவரும் காசின் மாகாணத்தில் ராணுவ ஹெலிகாப்டா் விழுந்து நொறுங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக ராணுவம் கூறினாலும், தங்களால்தான் அந்... மேலும் பார்க்க