செய்திகள் :

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

post image

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபையில் நாளை மறுநாள் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்திடம் தோல்வியடைந்ததால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.

இதையும் படிக்க: இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

ஷகித் அஃப்ரிடி கூறுவதென்ன?

நாளை மறுநாள் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ள நிலையில், பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஷகித் அஃப்ரிடி

இது தொடர்பாக அவர் பேசியதாவது: போட்டியை வென்று கொடுப்பவர்கள் என்று பார்த்தால், பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருக்கிறார்கள். போட்டியை வென்று கொடுப்பவர் என்பவர் தனி நபராக சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியைத் தேடித் தருபவர். தற்போது, பாகிஸ்தான் அணியில் அதுபோன்ற வீரர்கள் இல்லை.

இதையும் படிக்க: மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!

இந்திய அணியின் நடுவரிசை மற்றும் பின்வரிசை வீரர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள். பாகிஸ்தான் அணியின் நடுவரிசை மற்றும் பின்வரிசை அந்த அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை. நீண்ட காலமாக பாகிஸ்தான் அணியில் வீரர்களுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், வீரர்கள் சில போட்டிகளில் மட்டுமே நன்றாக விளையாடினர். தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட அவர்கள் தவறுகிறார்கள். அதன் காரணமாகவே, இந்திய அணியைக் காட்டிலும் பாகிஸ்தான் வலிமை குறைவாக உள்ளது. வலிமையான இந்திய அணியை வீழ்த்த பாகிஸ்தான் அணி வீரர்கள் குழுவாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.

முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்துள்ளது.அயர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் இன்று தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ்... மேலும் பார்க்க

மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நேரலை!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியைக் காண மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபைய... மேலும் பார்க்க

துபையில் வெற்றி பெற எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும்? ஷுப்மன் கில் பதில்!

துபையில் விளையாடும் போட்டிகளில் வெற்றி பெற ஒரு அணி எவ்வளவு ரன்கள் எடுக்க வேண்டும் என இந்திய அணியின் துணைக் கேப்டன் ஷுப்மன் கில் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அண்மையில் தொடங்கியது. அனைத்த... மேலும் பார்க்க

வரலாறு படைத்த பென் டக்கெட்; ஆஸ்திரேலியாவுக்கு 352 ரன்கள் இலக்கு!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்கள் எடுத்துள்ளது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டிய... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: ஆஸி.க்கு எதிராக சதம் விளாசிய பென் டக்கெட்!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சதம் விளாசி அசத்தினார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் லாகூரில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!

இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அலெக்ஸ் கேரி 3 கேட்ச்சுகள் பிடித்து அசத்தியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி 4ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது... மேலும் பார்க்க