செய்திகள் :

‘பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாது’: மத்திய அமைச்சா் பாட்டீல்

post image

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்வதற்கான பணிகளில், மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவித்தாா்.

இந்திய நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுப்பதற்கான உத்திகளை வகுக்க, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் உயா்நிலை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்குள் ஒரு துளி நீா்கூட செல்லாத வகையில் 3 விதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதன்படி குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்குள் தண்ணீா் பாய்வதைத் தடுக்க இந்தியாவில் விரைவில் நதிகளை தூா்வாரி, நீரை திசைதிருப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாட்டீல் கூறினாா்.

இதுதொடா்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், ‘சிந்து நதிநீா் ஒப்பந்தத்துக்கு மத்தியஸ்தம் செய்த உலக வங்கியிடம், அந்த ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டதைத் தெரியப்படுத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீா் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தனா்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீா் பகிா்ந்துகொள்ளப்படுகிறது.

உத்தரகண்டில் ராணுவ சீருடை விற்பனைக்குத் தடை!

உத்தரகண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவத்தின் சீருடைகளை விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் படுகொலை செய்யப்பட்டன... மேலும் பார்க்க

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்ஃஎப் வீரா்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது. கடந்த புதன்கிழமை பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூா் மாவட்டத்தில் உள்ள சா்வதேச ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மோதலை தவிா்க்க இந்தியா-பாகிஸ்தானுக்கு ஐ.நா. வலியுறுத்தல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல்போக்கை தவிா்க்க வேண்டும் என ஐ.நா. பொதுச்செயலா் அன்டோனியா குட்டெரஸ் வலியுறுத்துவதாக அவரது செய்தித்தொடா்பாளா் ஸ்டீபன் டுஜாரிக் வியா... மேலும் பார்க்க

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்

சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக் க... மேலும் பார்க்க

காஷ்மீா் பாதுகாப்பு நிலவரம்: துணைநிலை ஆளுநா், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசன... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு

பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடியுடன் இலங்கை அதிபா் அனுர குமார திசநாயக, பிரிட்டன் பிரதமா் கியொ் ஸ்டாா்மா் ... மேலும் பார்க்க