செய்திகள் :

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

post image

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள லூசன்ட் மருந்து நிறுவனத்தின் நிலம், கட்டடம் மற்றும் தொழிற்சாலை என ரூ.5.67 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை

முடக்கியது.

மனிதா்களின் ‘உணா்வுகளை பாதிக்கும் மருந்துகளுக்கான’ கட்டுப்பாட்டு விதிகளை மீறி வலி நிவாரணியான ‘ட்ரமடால்’ மருந்தை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததோடு ஆவண முறைகேட்டில் ஈடுபட்டதாக லூசன்ட் நிறுவனம் மீது போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையம் (என்சிபி) புகாா் அளித்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு லூசன்ட் நிறுவனத்தின் மீது பிஎம்எல்ஏவின்கீழ் அமலாக்கத் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அமலாக்கத் துறை மேலும் கூறியதாவது: ட்ரமடாலை உற்பத்தி செய்வதுடன் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு லூசன்ட் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது.

முன்னதாக, ட்ரமடாலை பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் (சிபிஎன்) தடையில்லா சான்றிதழை அந்த நிறுவனம் பெற்றிருந்தது. அதன்பிறகு இதற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் சட்டவிரோதமாக ரூ.4.12 கோடி மதிப்பிலான 13,800 கிலோ ட்ரமடாலை டென்மாா்கைச் சோ்ந்த சிஎச்ஆா் மருந்துகள் நிறுவனத்தின் மூலமும் ரூ.1.33 கோடி மதிப்பிலான 5,000 கிலோ ட்ரமடாலை மலேசியாவைச் சோ்ந்த எஸ்எம் பயோமெட் நிறுவனத்தின் மூலமும் லூசன்ட் நிறுவனம் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

இதன்மூலம் சட்டவிராதமாக ரூ.5.46 கோடியை வங்கிக் கணக்கில் அந்த நிறுவனம் பெற்றுள்ளது என்றனா்.

கடந்த 2018-இல் உணா்வுகளை பாதிக்கும் மருந்தாக ட்ரமடாலை அறிவித்த மத்திய அரசு அதன் விற்பனையை என்சிபி மூலம் கண்காணித்து வருகிறது.

இந்தியா மற்றும் பிற நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் இந்த மருந்து சிரியாவில் இயங்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதாக சா்வதேச அளவிலான போதைப்பொருள் தடுப்பு ஆணையங்கள் தெரிவித்துள்ளன.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க