செய்திகள் :

பாகிஸ்தான் சிறையில் இந்திய மீனவர் தற்கொலை!

post image

பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய மீனவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி இந்திய மீனவர் கௌரவ் ராம் ஆனந்த் (52) கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் கராச்சி சிறையில் 3 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் இவர் நேற்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. சிறையில் உடன் இருக்கும் நண்பர் வெளியே சென்ற நேரத்தில் நள்ளிரவில் அவர் தற்கொலை செய்துகொண்டதாக சிறை அதிகாரி தெரிவித்தார்.

சில மாதங்களுக்கு முன் குஜராத்தைச் சேர்ந்த பாபு பாய் சுடாசாமா என்ற மீனவர் பாகிஸ்தான் சிறையில் தண்டனைக் காலம் முடிந்து அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உடல்நலக் கோளாறால் பலியானார்.

இதுபோல, இந்திய மீனவர்கள் பலர் பாகிஸ்தான் சிறையில் பலியாகும் சம்பவம் அடிக்கடி நடைபெறுகிறது.

இந்திய அரசு கொடுத்த தகவலின்படி, கடந்த டிசம்பர் 31, 2024 வரை பாகிஸ்தான் சிறையில் 144 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 1,173 படகுகள் அவர்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள. இதில் குஜராத் மீனவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

தெளிவாக வரையறுக்கப்பட்ட கடல் எல்லைகள் இல்லாதது, நவீன வழிகாட்டும் கருவிகளின் போதாமை, தவறுதலாக எல்லை தாண்டிச் செல்வது உள்ளிட்ட காரணங்களால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதையும் படிக்க | அடையாளத்தின் அடிப்படையில் 6 பயணிகள் சுட்டுக்கொலை! பிரதமர் கண்டனம்!

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க