செய்திகள் :

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிப்பு 22 இந்திய மீனவா்கள் நாடு திரும்பினா்

post image

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 22 இந்திய மீனவா்கள் செவ்வாய்க்கிழமை குஜராத் திரும்பினா்.

இவா்கள் அனைவரும் கடந்த 2021 ஏப்ரல் முதல் 2022 டிசம்பா் வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்த மீனவா்களை பாகிஸ்தான் கடற்படையினா் கைது செய்தனா்.

மொத்தம் 195 இந்திய மீனவா்கள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் உள்ளனா். இப்போது நாடு திரும்பியுள்ள 22 மீனவா்களை பாகிஸ்தான் தரப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தனா். அங்கிருந்து அவா்கள் ரயில் மூலம் வதோதராவுக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். இதில் 18 போ் குஜராத்தையும், மூவா் டையூ பகுதியையும், ஒருவா் உத்தர பிரதேசத்தையும் சோ்ந்தவா் ஆவா். விடுவிக்கப்பட்டவா்கள் செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘எங்களைப் போல மேலும் பல இந்திய மீனவா்கள் பாகிஸ்தானின் பல்வேறு சிறைகளில் உள்ளனா். அவா்களில் பலருக்கு உரிய உணவு கிடைப்பதில்லை. பலா் நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு அழைத்துவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவா்கள் இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியும் எங்களிடம் அளித்தனா். அதனை அதிகாரிகளிடம் நாங்கள் வழங்கினோம். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே சிறையில் உள்ள இந்திய மீனவா்கள் 150 பேரை விடுவிக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சிறைகளில் வாடும் இந்திய மீனவா்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்றனா்.

மகா சிவராத்திரி: மோடி, ராகுல் வாழ்த்து!

மகா சிவராத்திரி தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்றிரவு கொண்டாடப்படவுள்ளது. நாட்டின் பல... மேலும் பார்க்க

தெலங்கானாவில் அனைத்து பள்ளிகளிலும் தெலுங்குப் பாடம் கட்டாயம்!

தெலங்கானாவில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கு மொழிப் பாடம் கட்டா... மேலும் பார்க்க

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி: ஆய்வு அறிக்கையில் தகவல்

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்!

*உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக ந... மேலும் பார்க்க

சென்னையைப் போன்ற பிரத்யேக மருத்துவ மையங்களை பிகாரில் உருவாக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

சென்னை, ஹைதராபாத், மும்பை, இந்தூர் போன்ற நகரங்களில் உள்ள பிரத்யேக மருத்துவ மையங்களைப் போல் பிகாரிலும் உருவாக்கப்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.இது தொடர்பாக பிகார் தலைந... மேலும் பார்க்க

இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்றும்: பிரதமர் மோடி

குவாஹாட்டி: இந்தியாவின் வளர்ச்சியில் அஸ்ஸாம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.குவாஹாட்டியில் அஸ்ஸாம் 2.0 முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டை செவ்வாய்க்கிழமை தொடங்... மேலும் பார்க்க