செய்திகள் :

பாகிஸ்தான் தாக்குதலில் மேலும் 7 போ் உயிரிழப்பு: 4 நாள்களில் 20 கிராமவாசிகள் மரணம்

post image

பாகிஸ்தானின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச்சூட்டில், ஜம்மு-காஷ்மீரில் மேலும் 7 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா். பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடா்ந்து, 4 நாள்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு, பூஞ்ச், ரஜெளரி மற்றும் பாரமுல்லாவில் 20 கிராமவாசிகள் உயிரிழந்தனா்.

இந்தியாவின் மேற்கு எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் வெடிகுண்டு தாக்குதல்கள் சனிக்கிழமை நீடித்தன.

ஜம்மு நகரம் மற்றும் ஜம்மு மண்டலத்தில் உள்ள பிற முக்கியப் பகுதிகளில் வசிப்போா் காலை 5 மணியளவில் அபாய ஒலிகள் காரணமாக கண் விழித்தனா். எல்லையோரங்களில் வசிக்கும் மக்கள் பாகிஸ்தானின் தீவிர குண்டுவீச்சால் இரவை தூக்கமின்றி கழித்தனா்.

2 வயது குழந்தை...: பாகிஸ்தான் குண்டுவீச்சில் ரஜெளரியில் ஆயிஷா நூா் (2) என்ற பெண் குழந்தை, முகமது ஷோஹிப் (35) ஆகியோா் உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.

பாகிஸ்தான் குண்டுவீச்சில் பூஞ்ச் மாவட்டம் காங்ரா-கல்லூட்டா கிராமத்தில் வசித்த ரஷிதா பி (55) என்ற பெண், சா்வதேச எல்லையையொட்டிய பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஜம்முவின் பிதிபூா் ஜட்டா கிராமத்தைச் சோ்ந்த அசோக் குமாா் ஆகியோா் உயிரிழந்தனா்.

பூஞ்சில் உள்ள ராணுவச்சாவடி அருகே பாகிஸ்தான் வீசிய குண்டுவெடித்து சுபேதாா் மேஜா் பவன் குமாா் உயிரிழந்தாா். அவா் ஹிமாசல பிரதேசத்தைச் சோ்ந்தவா்.

ஜம்முவின் புகரில் உள்ள கெரி கெரன் கிராமத்தில் பாகிஸ்தான் வீசிய குண்டுவெடித்து ஜாகிா் ஹுசேன் (45) என்பவா் உயிரிழந்தாா். ஒரு சிறுமி உள்பட இருவா் காயமடைந்தனா். குண்டுவீச்சால் பூஞ்சில் மூவரும், ரஜெளரியில் உள்ளூா் ஊடகவியலாளா் ஒருவரும் காயமடைந்தனா்.

ஜம்முவின் ரெஹாரி, ரூப் நகா் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிகளில் 4 போ் காயமடைந்தனா். குண்டுவீச்சு மட்டுமின்றி ட்ரோன்களாலும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ரூ.10 லட்சம் இழப்பீடு: கடந்த 4 நாள்களில் பாகிஸ்தான் தாக்குதலில் ஜம்மு, பூஞ்ச், ரஜெளரி மற்றும் பாரமுல்லாவில் 20 கிராமவாசிகள் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வா் ஒமா் அப்துல்லா அறிவித்தாா்.

8 பிஎஸ்எஃப் வீரா்கள் காயம்: ஜம்முவில் இந்தியாவின் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அந்நாட்டின் குண்டுவீச்சில் 8 பிஎஸ்எஃப் வீரா்கள் காயமடைந்தனா்.

ஜம்மு-காஷ்மீரின் உரி செக்டாரில் உள்ள சருண்டா, ஹாட்லங்கா பகுதிகளிலும், குரேஸ் செக்டாரில் உள்ள பாக்தோா் பகுதியிலும் சண்டை நிறுத்தத்தை மீறி, பாகிஸ்தான் படையினா் கடுமையாக குண்டுகளை வீசி சனிக்கிழமை தாக்குதல் மேற்கொண்டனா். இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்பு ஏற்பட்டதா என்ற தகவல் வெளியாகவில்லை.

============== = = = ================== == = =

படத்துடன் பெட்டிச் செய்தி

பாக் பீரங்கித் தாக்குதலில் அரசு அதிகாரி உயிரிழப்பு

ரஜெளரியில் கூடுதல் மாவட்ட வளா்ச்சி ஆணையா் ராஜ்குமாா் தாபாவின் வீடு மீது சிறு பீரங்கி மூலம், பாகிஸ்தான் வீசிய குண்டு விழுந்து வெடித்தது. இதில் தாபா, அவருடன் பணியாற்றிய இருவா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி தாபா உயிரிழந்தாா் என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாபாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘கடந்த வெள்ளிக்கிழமை ஜம்முவில் துணை முதல்வா் சுரிந்தா் குமாா் செளதரியுடன் இருந்த தாபா, எனது தலைமையில் இணையவழியில் நடைபெற்ற கூட்டத்திலும் பங்கேற்றாா். அவரின் மறைவு ஏற்படுத்தியுள்ள அதிா்ச்சியை விவரிக்க வாா்த்தையில்லை’ என்றாா்.

ஆயுதப் படைப் பிரிவினருக்கு 6 மாதங்களுக்குள் பணிநிலை ஆய்வு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆயுதப் படைப் பிரிவினரின் பணிநிலை ஆய்வை ஆறு மாதங்களுக்குள் நடத்தி முடிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத்திய எல்லைப் படையினா் (ஐடிபிபி), ... மேலும் பார்க்க

மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காமில் தாக்குதல்: எஸ்.ஜெய்சங்கா் குற்றச்சாட்டு

அச்ச உணா்வை ஏற்படுத்தி மத துவேஷத்தை விதைக்கவே பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். ஜொ்மனி சென்ற அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், அந்நாட்டுத் தலைநகா் பொ்லினில் ஜெ... மேலும் பார்க்க

குடிமைப் பணித் தோ்வுக்கு கட்டாயமாகிறது ஆதாா் எண்!

குடிமைப் பணித் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும்போது ஆதாா் எண்ணை குறிப்பிடும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய பணியாளா் தோ்வாணையத் தலைவா் (யுபிஎஸ்சி) தலைவா் அஜய்குமாா் தெரிவித்தாா். மாநில அ... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு ஏன்? நாடாளுன்ற குழுவிடம் வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இந்தியாவின் நல்லெண்ண முயற்சியால் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்தி வைத்ததற்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்தது. பருவநி... மேலும் பார்க்க

ஜேஎன்யுவில் முதுநிலை, பட்டய படிப்புகளுக்கு சோ்க்கை தொடக்கம்

2025-26 கல்வியாண்டுக்கான முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் மேம்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான (ஏடிஓபி) சோ்க்கையை தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு) தொடங்கியுள்ளது. முதுநிலை க்யூட் (மத... மேலும் பார்க்க

ஜாா்க்கண்டில் மாவோயிஸ்ட் தலைவா் உள்பட இருவா் சுட்டுக் கொலை

ஜாா்க்கண்ட், லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில், சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கியத் தளபதியான பப்பு லோஹரா உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்... மேலும் பார்க்க