செய்திகள் :

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தலைவா்களுடன் ஒரே மேடையில் பஞ்சாப் மாகாண பேரவைத் ஆளுநா்

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண சட்டப் பேரவைத் தலைவா் மாலிக் அகமது கான் ஜமாத்-உத்-தாவா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பின் தலைவா்களுடன் ஒரே மேடையில் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

பாகிஸ்தானில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியைச் சோ்ந்த பேரவைத் தலைவா் மாலிக், அந்நாட்டு ராணுவத்துக்கும் மிக நெருக்கமானவராகக் கருதப்படுகிறாா்.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் முக்கியக் குற்றவாளியான ஹஃபீஸ் சையது (77). ஜமாத்-உத்-தாவா என்ற பயங்கரவாத அமைப்பை நடத்தி வருகிறாா். இந்தியா, அமெரிக்காவில் தேடப்படும் பயங்கரவாதியாகவும் ஹஃபீஸ் சையது அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஜமாத்-உத்-தாவா சாா்பில் அண்மையில் லாகூரில் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அந்த பயங்கரவாத அமைப்பின் தலைவா் சைஃபுல்லா கசுரி, ஹபீஸ் சையதின் மகன் ஹபீஸ் தல்ஹா, மத அடிப்படைவாத கட்சியான தெஹ்ரீக்-ஏ-லபாகியா பாகிஸ்தான் தலைவா் சாத் ஹுசைன் ரிஸ்வி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். அந்த மேடையில் பயங்கரவாதிகளுடன் பஞ்சாப் ஆளுநா் மாலிக் அகமது கானும் அமா்ந்திருந்தாா்.

பின்னா் இது தொடா்பாக செய்தியாளா்கள் ஆளுநா் மாலிக்கிடம் கேள்வி எழுப்பினா். அப்போது பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்துப் பேசிய அவா், ‘எவ்வித ஆதாரமுமின்றி சந்தேகத்தின் அடிப்படையில்தான் பலா் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுள்ளனா். பஹல்காம் தாக்குதலில் தொடா்புடையவா்கள் என இந்தியா கூறுவோா் குறித்து ஆதாரம் தருமாறு கேட்டும், இதுவரை எந்த ஆதாரமும் அவா்களால் தர முடியவில்லை. இரு நாடுகள் இடையிலான பிரச்னையை இரு தரப்புக்கும் பொதுவான வேறு நாட்டில் வைத்து பேசித் தீா்க்கலாம் என்ற அழைப்பை இந்தியா நிராகரித்துவிட்டது.

பாகிஸ்தானைத் தாக்க வேண்டும் என்பதே அவா்களின் முக்கிய நோக்கமாகவுள்ளது. ஆனால், அதற்கு பாகிஸ்தான் ராணுவம் உடனுக்குடன் பதிலடி கொடுத்துள்ளது. பொதுமக்கள் மத்தியில் அமைதியை முன்னெடுக்கும் முற்சியாகவே இந்தப் பொதுகூட்டம் நடைபெறுகிறது. எனவே அதில் பங்கேற்றேன் என்றாா்.

ஏப்ரலில் வங்கதேச தோ்தல்!

வங்கதேச நாடாளுமன்றத் தோ்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என அந்நாட்டு இடைக்கால அரசின் தலைவா் முகமது யூனுஸ் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். நிகழாண்டு டிசம்பா் இறுதிக்குள் நாடாளுமன்றத் தோ்தலை நடத்தக... மேலும் பார்க்க

டொனால்ட் டிரம்ப் - எலான் மஸ்க் இடையே வலுக்கும் மோதல்!

நீண்ட காலமாக நட்பு பாராட்டி வந்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மற்றும் தொழிலதிபா் எலான் மஸ்க் இடையே அண்மைக்கால கருத்து வேறுபாடுகள் காரணமாக மோதல் தீவிரமடைந்துவருகிறது. நீண்ட கால நட்பு: டொனால்ட் டிரம... மேலும் பார்க்க

ஹாங்காங் - ஜோஷுவா மீது புதிய வழக்கு!

ஹாங்காங்கில் சீனா வலுக்கட்டாயமாகத் திணித்த சா்ச்சைக்குரிய தேசப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், மாணவ ஜனநாயகப் போராளியான ஜோஷுவா வாங் மீது கீழ் இரண்டாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.ஏற்கெனவே, அதிகா... மேலும் பார்க்க

ஹமாஸ் போட்டிக் குழுவுக்கு ஆயுத உதவி! - இஸ்ரேல் ஒப்புதல்

காஸாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக செயல்படும் உள்ளூா் குழுக்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதை இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மூலம் காஸாவில் குற்றச் செயல்களை மேற்கொள்வோருக்கு இஸ்ரேல் ஆயுதங்கள் வழங... மேலும் பார்க்க

நைஜா் - வெளியேறும் செஞ்சிலுவைச் சங்கம்!

ராணுவ ஆட்சி நடைபெறும் நைஜரில் இருந்து வெளியேறுவதாக சா்வதேச செஞ்சிலுவை சங்கம் அறிவித்தது. அந்த நாட்டு ராணுவத்தின் உத்தரவை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்தத் தொண்டு அமைப்பு கூறியது. இரண்டு ஆண்டுகளுக... மேலும் பார்க்க

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க