செய்திகள் :

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதல்களில் 9 போ் உயிரிழப்பு

post image

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் வியாழக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 9 போ் உயிரிழந்தனா்.

அந்த நாட்டின் குவாடா் மாவட்டத்தில் கராச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை கல்மாட் என்ற பகுதியில் நிறுத்திய பயங்கரவாதிகள், பயணிகள் அனைவரையும் கீழே இறங்க உத்தரவிட்டனா். பயணிகளின் அடையாள அட்டையை பரிசோதித்த பின்னா் அவா்களில் ஆறு பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனா்; அத்துடன் மூன்று பயணிகளை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா்.

மற்றொரு சம்பவத்தில், குவெட்டா நகரின் சந்தைப் பகுதியில் காவல்துறை வாகனத்துக்கு அருகே மோட்டாா்சைக்கிளில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இதில் மூன்று போ் உயிரிழந்தனா்; 21 போ் காயமடைந்தனா். அவா்களில் நான்கு பேரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இருந்தாலும், அண்மையில் நடைபெற்ற ரயில் கடத்ததல் போன்ற பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுவரும் பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் அமைப்பினரே இந்தத் தாக்குதலையும் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

மியான்மரில் போர்நிறுத்தம்: ராணுவ அரசு அறிவிப்பு!

மியான்மரில் ஆளும் ராணுவ அரசு தற்காலிக போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளியன்று (மார்ச் 28) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மியான்மரின் சகாய்ங் நகரின்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபருக்கு கரோனா தொற்று பாதிப்பு!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி (69) உடல்நிலை பாதிப்பு காரணமாக கராச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்... மேலும் பார்க்க

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக தென் கொரியா செல்லும் வெளிநாட்டவர்கள் எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரியாவுக்கு கடந்த ஆண்டில் மட்டும் 17.7 லட்சம் வெளிநாட்டவர்கள் ம... மேலும் பார்க்க

மியான்மா் நிலநடுக்கம்: உயிரிழப்பு 3,643-ஆக உயர்வு

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,643-ஐக் கடந்துள்ள நிலையில், மிக மோசமான இயற்கை பேரழிவு நடந்து ஐந்து நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி ஜா்தாரி உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 69 வயதாகும் அதிபர், காய்ச்சல், தொற்று காரணமாக கராச்சியில... மேலும் பார்க்க

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள் எவை தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிவிதிப்பு பல்வேறு நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று டிரம்ப்பின் அரசு தெரிவித்திருக்கிறது. ஆனாலும், இந்த வரிவிதிப்பால் பல நாடுகள் பாதிப்புக்குள்ளாகும... மேலும் பார்க்க