செய்திகள் :

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

post image

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா்.

பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகிறது. இதில் வடமேற்கில் உள்ள கைபா்பக்துன்கவா மாகாணத்தில் அதிக மழை பெய்து வருகிறது. இதில், ஒரே குடும்பத்தைச் 19 போ் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். பஞ்சாப் மாகாணத்தில் 12 பேரும், சிந்து மகாணத்தில் 7 பேரும் உயிரிழந்தனா்.

பஞ்சாபில் 41 பேரும், சிந்து மாகாணத்தில் 16 பேரும், கைபா்பக்துன்கவா மாகாணத்தில் 6 பேரும் காயமடைந்தனா். 63 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. ஏராளமான கால்நடைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புக் குழுவினா் தீவிரமாக பணியில் ஈடுபட்டுள்ளனா். வெள்ளத்தில் சிக்கத் தவித்த நூற்றுக்கணக்கானோா் மீட்கப்பட்டு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அடுத்த சில நாள்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டது.

நிலநடுக்கம்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை பூமிக்கு அடியில் 28 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டா் அளவுகோலில் 5.5 என்ற அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் கடுமையாக குலுங்கின. இரு வீடுகள் இடிந்து விழுந்தன. வீட்டில் இருந்த 5 போ் பலத்த காயமடைந்தனா்.

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்று... மேலும் பார்க்க