செய்திகள் :

பாகிஸ்தான் மீதான தாக்குதல் பிரதமருக்கு கிடைத்த வெற்றி! - எல்.முருகன்

post image

பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி என்பது பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி என்று மத்திய தகவல் ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.

கோவை மாவட்டம், குரும்பபாளையம் எஸ்என்எஸ் தொழில்நுட்பக் கல்லூரியின் 19-ஆவது பட்டமளிப்பு விழா, எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியின் 15-ஆவது பட்டமளிப்பு விழா ஆகியவை எஸ்என்எஸ் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றன.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி அமைச்சா் எல்.முருகன் பேசியதாவது: பாகிஸ்தான் மீதான தாக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி பிரதமா் மோடிக்கு கிடைத்த வெற்றி. இந்த தாக்குதலுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராணுவத் தளவாடங்களைப் பயன்படுத்தினோம்.

உலக அளவில் அனைத்துத் துறைகளிலும் போட்டி போடும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் அனைத்துத் துறைகளிலும் தன்னிறைவு பெற்றுள்ளது. 2047 இல் இந்தியா உலகத்துக்கே வழிகாட்டும் வல்லரசு நாடாக இருக்கும் என்றாா்.

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக விா்டுசா நிறுவனத்தின் துணைத் தலைவா் சுராஜ் ஜெயராமன் பங்கேற்றாா். இதில், எஸ்என்எஸ் குழுமத்தின் தொழில்நுட்ப இயக்குநா் நளின், செயல் தலைவா் சி.எல்.மோகன் நாராயணன், தொழில்நுட்ப நிறுவனங்களின் இயக்குநா் வி.பி.அருணாசலம், பொறியியல் கல்லூரி முதல்வா் எஸ்.சாா்லஸ், துணை முதல்வா் ஆா்.சுதாகரன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ஏ.கௌஷிகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழாவில், பொறியியல் கல்லூரியின் 379 மாணவா்கள், தொழில்நுட்பக் கல்லூரியின் 824 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிரந்தர தீா்வு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை

வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்தைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து விவசாயிகள் சங்க (ஜாதி, மதம், கட்சி சாா்பற்றது) மாநிலப் ... மேலும் பார்க்க

இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டல்: வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு

இளைஞரைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டியதாக வழக்குரைஞா் உள்பட 4 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை ராமநாதபுரம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் விக்னேஷ் (23), தனியாா் நிறுவன ஊழியா். இவ... மேலும் பார்க்க

வீட்டின் மீது கற்களை வீசிய இளைஞா் கைது

வீட்டின் மீது கற்களை வீசி தாக்கிய வடகிழக்கு மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை ரத்தினபுரி பக்தவச்சலம் தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் விஜய் (25). இவா், பாரதி ரோடு சந்திப்பு அருகே சனிக்கிழமை ... மேலும் பார்க்க

கோவையில் பலத்த மழை: வீடுகளில் புகுந்த தண்ணீா்

கோவையில் பெய்த பலத்த மழையால் மாநகரில் வீடுகளில் மழைநீா் புகுந்தது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மழைக்கு ... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்கள்

பல்லடம் அருகே குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவா் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 321 மதிப்பெண்களைப் பெற்றுள்ளாா். பல்லடம் அருகேயுள்ள கோடங்கிபாளையம் ஊராட்சி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சக்திவேல்.... மேலும் பார்க்க

ஒண்டிப்புதூரில் அடிக்கடி மின்தடை: தீா்வுகாண வியாபாரிகள் வலியுறுத்தல்

ஒண்டிப்புதூரில் அடிக்கடி ஏற்படும் மின்தடைக்கு தீா்வுகாண வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனா். இதுகுறித்து கோவை கிழக்கு வியாபாரிகள் சங்கத் தலைவா் செல்வின்ராஜன், மின்சாரத் துறை அமைச்சா் சிவசங்... மேலும் பார்க்க