செய்திகள் :

பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதிக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி

post image

இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பாகிஸ்தானில் 9 இடங்களில் செயல்பட்டு வந்த பயங்கரவாத தலைமையகங்கள், முகாம்கள் தாக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன், ஏவுகணைகள் மூலம் நடத்திய தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்தன. மேலும், இந்தியாவின் பதிலடி நடவடிக்கையில் பாகிஸ்தான் விமானப் படை தளங்கள் பலவும் சேதமடைந்தன. இறுதியாக பாகிஸ்தானின் சண்டை நிறுத்த கோரிக்கையை ஏற்று இந்த தாக்குதல் நடவடிக்கையை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி முனீருக்கு பதவி உயா்வு அளிக்கப்பட்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில், ‘பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் நடைபெற்ற பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ பதவி உயா்வு அளிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான சண்டையில் பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றிகரமாக வழி நடத்தியது, களத்தில் அவரின் வெகு சிறப்பான செயல்பாட்டை கௌரவிக்கும் வகையில் இந்தப் பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றியைக் கொண்டாடவில்லை: சீன அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் லெப்டினன்ட் ஜெனரல் அமகது ஷெரீஃப் சௌதரி, ‘பாகிஸ்தானியா்கள் வெற்றியைக் கொண்டாடவில்லை; அமைதியைத்தான் கொண்டாடுகிறாா்கள். பாகிஸ்தான் வளா்ச்சிப் பாதையில் பயணிக்கவே விரும்புகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி தாக்குதல் நடத்தியது’ என்றாா்.

சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் பலி

பாகிஸ்தானில் சிந்து கால்வாய் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். சிந்து மாகாணத்தின் நௌஷாரோ ஃபெரோஸ் மாவட்டத்தில், சிந்து நதிய... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு நாங்கள் தண்ணீர் தருவோம்.. வரிந்துகட்டும் சீனா!

சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியிருக்கும் நிலையில் பாகிஸ்தானில் கட்டப்பட்டு வரும் முகமது அணையின் கட்டுமானப் பணிகளை சீனா துரிதப்படுத்தி வருகிறது.இந்த அணை கட்டப்பட்டுவிட்டால், பாகிஸ்தானுக்கு தண்ணீர் மற... மேலும் பார்க்க

கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாங்கே அணிந்து வந்த சட்டை சர்வதேச அளவில் பேசுப்பொருளாகியுள்ளது. கேன்ஸ் திரைப்பட விழாவானது ஒவ்வொரு ஆண்டும் தி... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பள்ளிப்பேருந்தின் மீது வெடிகுண்டு தாக்குதல்! 4 குழந்தைகள் பலி..38 பேர் காயம்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் வெடிகுண்டு தாக்குதலில் 4 குழந்தைகள் பலியாகியுள்ளனர். பலூசிஸ்தானின் குஸ்தார் மாவட்டத்தில் இன்று (மே 21) காலை பள்ளிப்பேருந்தின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலி... மேலும் பார்க்க

காஸா நிவாரணத் தடை விவகாரம்: இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரிப்பு

காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அகற்ற இஸ்ரேலுக்கு நட்பு நாடுகளின் நெருக்கடி அதிகரித்துவருகிறது. இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், அந்த நா... மேலும் பார்க்க

இலங்கை இறுதிப் போா் நினைவு நாள்: 12,400 ராணுவத்தினருக்கு பதவி உயா்வு

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையிலான உள்நாட்டுச் சண்டையை முடிவுக்குக் கொண்டு வந்த இறுதிகட்டப் போரின் நினைவு நாளையொட்டி, 12,400 ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரா்களுக்கும் பதவி உயா்வ... மேலும் பார்க்க