செய்திகள் :

பாகிஸ்தான்: 2 நாள்களில் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

post image

ஆப்கானிஸ்தான் நாட்டுடனான பாகிஸ்தானின் எல்லையில், அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில், அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் 14 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பழங்குடியின மக்கள் அதிகம் வாழும், வடக்கு வசிரிஸ்தான் மாவட்டத்தின், தட்டா கெல் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கடந்த ஜூன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில், அந்நாட்டு வீரர்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பது உறுதியானதால் அவர்களை அழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், பாகிஸ்தானின் பாதுகாப்புப் படைகள் தங்களது நாட்டை விட்டு பயங்கராவத்தை முற்றிலும் அழிக்கத் தயாராகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப்தான் நிறுத்தினார்: புதினின் உதவியாளர்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவார்தையினால் நிறுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். ரஷியா - உக்ரைன் மோதல் குறித்து... மேலும் பார்க்க

புதிய கட்சித் தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாகத், தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்... மேலும் பார்க்க

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்த... மேலும் பார்க்க

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க