பாக். எல்லையில் பதற்றம்: இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சி!
புது தில்லி: பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை நாளைமுதல் போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளது.
இது குறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் இன்று(மே 6) தெரிவித்திருப்பதாவது: நாளையிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் எல்லையையொட்டிய பலைவனப் பகுதிகளில் விமானப்படையின் போர் ஒத்திகை மற்றும் பயிற்சி நடைபெறும். இதில், ரஃபேல் போர் விமானம், மிராஜ் 2000, சுகோய்-30எஸ் உள்பட அனைத்து போர் விமானங்களும் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.