செய்திகள் :

பாஜகவுக்கு தார்மீக தோல்வி; சித்தாந்தப் போர் தொடர்கிறது - காங்கிரஸ்

post image

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எண்களில் வெற்றி பெற்றிருந்தாலும், பாஜகவுக்கு தார்மீக ரீதியிலும் அரசியல் ரீதியிலும் தோல்விதான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 15வது குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து, காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட பி. சுதர்சன் ரெட்டி, 300 வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார்.

வெற்றி பெற்ற சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக நின்றன.

எதிர்க்கட்சிகளின் செயல்திறன் சந்தேகத்திற்கு இடமின்றி மரியாதைக்குரியதாக இருந்தது.

கூட்டணி வேட்பாளர் ஓய்வு பெற்ற நீதிபதி பி. சுதர்சன் ரெட்டி 40% வாக்குகளைப் பெற்றார். 2022 இல் நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் 26% வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தன.

பாஜகவுக்கு எண்கணித முறையில் வெற்றி என்றாலும், உண்மையில் தார்மீக மற்றும் அரசியல் இரண்டிலும் தோல்விதான். சித்தாந்தப் போர் குறையாமல் தொடர்கிறது'' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க | சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி: செப்.12-ல் குடியரசு துணைத் தலைவராகிறார்?

Jairam Ramesh calls NDA's win a moral setback

’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு வாகனங்களை மறித்து அந்த மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் போராட்டம் நடத்தினார்.காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் த... மேலும் பார்க்க

நேபாளத்தில் வன்முறை: ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!

நேபாளத்தில் வெடித்துள்ள கலவரத்தைத் தொடர்ந்து, அந்நாட்டு தலைநகரான காத்மாண்டு இடையிலான அனைத்து ஏர் இந்தியா விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.நேபாள அரசுக்கு எதிராக, ஜென்-ஸி என அழைக்கப்படும் ... மேலும் பார்க்க

மோடியைப் போன்ற தலைவர் வேண்டும்: நேபாள இளைஞரின் விடியோவை பகிர்ந்த பாஜக

நேபாளத்தில் ஆளுங்கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் இளைஞர்கள், மோடியைப் போன்ற தலைவர் வேண்டும் என்று கூறும் விடியோவை பாஜக பகிர்ந்துள்ளது. மேலும் பார்க்க

ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அபிஷேக் பச்சனும் புகைப்படங்களைப் பயன்படுத்த தடை கோரி வழக்கு!

நடிகை ஐஸ்வர்யா ராயைத் தொடர்ந்து அவரது கணவர் அபிஷேக் பச்சனும் தனது புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த தடை கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இதுதொடர்பாக தில்லி உயர்நீதிமன்றத்தில் ... மேலும் பார்க்க

பிரதமர் மோடி நாளை உத்தரகண்ட் செல்கிறார்!

மேகவெடிப்பு மற்றும் பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட நாளை(செப். 11) உத்தரகண்ட் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.முன்னதாக, காலை 11.30 மணியளவில் உத்தரப் பிரதேச மாநிலம்... மேலும் பார்க்க

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க