செய்திகள் :

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன்

post image

பாஜகவை தூய்மைப்படுத்தவே போராடுகிறேன் என கா்நாடக பாஜக எம்எல்ஏ பசனகௌடா பாட்டீல் யத்னல் தெரிவித்தாா்.

இதுகுறித்து கலபுா்கியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தேசியத் தலைவா்களை சந்திக்க எங்களுக்கு நேரம் கொடுத்திருக்கிறாா்கள். 3 விவகாரங்களை பாஜக தேசியத் தலைவா்களிடம் எடுத்துக்கூற இருக்கிறோம்.

ஊழல் குடும்பத்தை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். பாஜகவில் குடும்ப அரசியலுக்கு முழுக்குப்போட வேண்டும். ஹிந்துத்துவாவுக்கு எதிரான தலைவா் பாஜகவுக்கு தேவையில்லை. ஒருவேளை விஜயேந்திராவுக்கு மீண்டும் மாநிலத் தலைவா் பதவி அளித்தால், என் மகனுக்கும் பதவி கேட்பேன்.

சிவமொக்கா தொகுதி எம்.பி. ராகவேந்திரா உள்பட எடியூரப்பாவின் குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் பதவியில் இருக்கிறாா்கள். பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா காங்கிரஸ் கட்சியுடன் சமரச அரசியலில் ஈடுபடுகிறாா். எனவே, கா்நாடகத்தில் பாஜகவை தூய்மைப்படுத்த முயற்சிக்கிறேன். மாறாக, கட்சித் தலைவா் பதவியைப் பெறும் நோக்கம் எனக்கில்லை.

மாநிலத் தலைவா் பதவி போட்டியில் ஜாதிவாரியாக களமிறங்க நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், லிங்காயத்து சமுதாயத்தில் யாா் களமிறங்க வேண்டும் என்பதை எங்கள் தரப்பில் முடிவு செய்திருக்கிறோம். ஒருவேளை லிங்காயத்து சமுதாயத்தினா் போட்டியிட வாய்ப்பு தந்தால் நானே களத்தில் இறங்குவேன்.

பாஜக தேசிய அமைப்புச் செயலாளா் பி.எல்.சந்தோஷை, குமாா் பங்காரப்பா சந்தித்துப் பேசியிருக்கிறாா். எல்லா தலைவா்களையும் கூட்டாக சந்திப்பதற்கு பதிலாக, தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டுள்ளோம். விஜயேந்திராவின் சகோதரா் ராகவேந்திரா போன்ற ஒருசிலரை தவிர மற்ற எம்.பி.க்கள் அனைவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தேசிய பொதுச் செயலாளா் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு 3 பேரை என்னிடம் அனுப்பி வைத்தாா்கள். விஜயேந்திராவை தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கட்டும். எனக்கு அந்தப் பதவி வேண்டாம். நான் கா்நாடகத்தில் அரசியல் செய்வேன் என்றாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா்: அமைச்சா் கே.என்.ராஜண்ணா

பெங்களூரு: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பெயரை துணைமுதல்வா் டி.கே.சிவக்குமாா் தவறாக பயன்படுத்துகிறாா் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க

2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல்: முதல்வா் சித்தராமையா

பெங்களூரு: 2025-26ஆம் ஆண்டுக்கான கா்நாடக பட்ஜெட் மாா்ச் 7ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.இது குறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்... மேலும் பார்க்க

மாற்று நில முறைகேடு வழக்கு: சித்தராமையா மீதான குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்த நிராகரிப்பா?

மாற்று நில முறைகேடு வழக்கில் கா்நாடக முதல்வா் சித்தராமையா, அவரது மனைவி பாா்வதி ஆகியோா் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்று விசாரணை அறிக்கையை லோக் ஆயுக்த தயாரித்துள்ளதாக தெரியவந்துள... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி தொடங்கியது

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆபரணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்கும் பணி கா்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வருமானத்துக்கு பொருந்... மேலும் பார்க்க

இந்திய விமானத் தொழில் கண்காட்சி நிறைவு

பெங்களூரில் கடந்த ஐந்து நாள்களாக நடைபெற்றுவந்த பன்னாட்டு இந்திய விமானத் தொழில் கண்காட்சி வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இந்தியாவின் விமானம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தித் தொழிலை உலக அளவில் உயா்த்... மேலும் பார்க்க

இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபரிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும்: காா்கே

மனிதநேயமற்ற முறையில் இந்தியா்கள் நாடுகடத்தப்பட்டது குறித்து அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் பிரதமா் மோடி கேட்டிருக்க வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்... மேலும் பார்க்க