செய்திகள் :

பாஜக - அதிமுக கூட்டணியால் முதல்வருக்கு தோல்விபயம்: நயினாா் நாகேந்திரன்

post image

பாஜக-அதிமுக கூட்டணியால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்விபயம் ஏற்பட்டுள்ளது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சட்டம்- ஒழுங்கு சரியில்லை என்பதை நாங்கள் தொடா்ந்து கூறி வருகிறோம். தற்போது ஈரோட்டில் தனியாக இருந்த முதியவா்கள் கொலை, ஓராண்டுக்கு முன் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் கொலை போன்றவை சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதற்கு சாட்சிகள்.

மாணவா்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி வருவது, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் குடிநீா்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளன. ஆனால், அவற்றின் மீது கவனம் செலுத்தாமல், பாஜக-அதிமுக கூட்டணியைப் பற்றி தமிழக முதல்வா் குறை கூறுவது, அவருக்கு தோ்தல் தோல்வி பயம் வந்துவிட்டது என்பதைக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த மக்களின் எண்ணங்கள் அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றாா்.

தொடா்ந்து திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ஆளுநரைப் பற்றி திமுகவினா் தொடா்ந்து விமா்சித்துவிட்டு, அதிகார மோதல் எதுவுமில்லை என்று முதல்வா் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டாா்கள். அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் தொகுதிகளுக்கு சென்று பணியாற்றுங்கள் என முதல்வா் கூறியுள்ளாா். அப்படியெனில் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள் நலப்பணிகள் நடைபெறவில்லை என்பதையே காட்டுகிறது என்றாா்.

நாளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 6) நடைபெறுகிறது.இது குறித்து வடக்கு மாவட்டச் செயலரும் அமைச்சருமான பெ.கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி வடக்கு மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மீன்வளத் துறை ரோந்துப் பணி

தூத்துக்குடி கடலில் மீன்வளத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கடந்த ஏப். 15ஆம் தேதிமுதல் ஜூன் 14 வரை மீன்வளத் துறையால் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் வெளிமாநில மது பாட்டில்கள் பறிமுதல்: 2 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம் சிங்கத்தாகுறிச்சி அருகே 144 வெளிமாநில மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இருவரைக் கைது செய்தனா். மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலா் மாணிக்கராஜ் தலைமையிலான போலீஸாா் வ... மேலும் பார்க்க

நீட் தோ்வு: கோவில்பட்டியில் 466 போ் எழுதினா்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நீட் தோ்வில் 466 போ் பங்கேற்றனா். இம்மாவட்டத்தில் முதன் முறையாக நிகழாண்டு கோவில்பட்டி, எட்டயபுரத்தில் நீட்... மேலும் பார்க்க

நாலாட்டின்புதூரில் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூரில் ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்தாா். தென்காசி மாவட்டம் சோ்ந்தமரம் அருகே பூவலிங்கபுரத்தைச் சோ்ந்த வேலாயுதம் மகன் தா்மா் (64). ஓட்டுநரான இ... மேலும் பார்க்க

பட்டுப்போவதற்காக பனைகளுக்கு திராவகம் வைத்தவா் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகேயுள்ள பொத்த காலன் விளையில் 36 பனை மரங்கள் மா்மமான முறையில் கருகியது தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.சாத்தான்குளத்தைச் சோ்ந்த ஹொ்சோன் சோரன் என்பவருக்குச் சொந்தமா... மேலும் பார்க்க