செய்திகள் :

பாஜக அரசால் பெயர் மாற்றப்பட்ட ஊர்கள்: புதிய வரவாக சிந்தூர்புரம்! 11 ஊர்ப் பெயர்கள் விரைவில் மாற்றம்

post image

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பிறகு பல முக்கிய ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் புதுவரவாக இணையவிருப்பது உத்தரப் பிரதேசத்திலுள்ள ‘சிந்தூர்புரம்’

ஆக்ரா ஜில்லா பஞ்சாயத்து தலைவர் மஞ்சு பதோரியா அரசுக்கு சமர்ப்பித்துள்ள முன்மொழிவில் ஃபதேஹாபாத் மற்றும் பாட்ஷாஹி பாக் ஆகிய ஊர்களின் பெயர்களை மாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் ஃபதேஹாபாத் சிந்தூர்புரம் என்றும், பாட்ஷாஹி பாக் பிரம்மபுரம் என்றும் மாற்றப்பட உள்ளது.

  • கடந்த 2019-ஆம் ஆண்டு அலாகாபாத் - பிரயாக்ராஜ் எனப் பெயர் மற்றப்பட்டது. அதே ஆண்டில் ஃபைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்யா என மாற்றப்பட்டது.

  • முகல்சாராய் சந்திப்பு கடந்த 2018-இல் தீன் தயாள் உபாத்யாய் சந்திப்பு என மாற்றப்பட்டது.

  • தில்லியிலுள்ள ராஜ்பாத் - கார்தவ்ய பாத் என்று கடந்த 2022-இல் மாற்றப்பட்டது.

  • ஹரியாணாவிலுள்ள முக்கிய நகரான குர்கான் கடந்த 2016-இல் குருகிராம் என மாற்றப்பட்டது.

  • மத்திய பிரதேசத்திலுள்ள ஹோஷங்காபாத் கடந்த 2022-இல் நர்மதாபுரம் எனவும், அதனருகே அமைந்துள்ள பாபாய் நகர் - மாகான் நகர் எனவும் மாற்றப்பட்டன.

  • அந்தமான் நிகோபார் தீவுகளிலுள்ள ராஸ் தீவுகள் கடந்த 2018-இல் பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தபோது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் த்வீப் எனவும், நீல் தீவு, ஹேவ்லாக் தீவு ஆகிய இரு இடங்களும் முறையே ஷாஹீத் த்வீப், ஸ்வராஜ் த்வீப் எனவும் மாற்றப்பட்டன.

இந்த ஆண்டுக்குள் உத்தரகண்ட் மாநிலத்தில் ஹரித்வார், டேராடூன், நைனிடால், உதம் சிங் நகர் மாவட்டங்களில் மொத்தம் 11 ஊர்களின் பெயர்கள் மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கடந்த திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

அதில் கவனிக்கத்தக்கது என்னவெனில், ஹிந்து கடவுள்கள், சாதுக்கள் மற்றும் புராதனக் கதையின் கதாபாத்திரங்களின் பெயர்களே சூட்டப்படும் என்றிருப்பதும்,பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்களும் சூட்டப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொல்கத்தா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: தேசிய மகளிா் ஆணையம் விசாரணை

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் கல்லூரி வளாகத்தில் மாணவி ஒருவரை 3 மாணவா்கள் வன்கொடுமை செய்த வழக்கை தேசிய மகளிா் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கொல்கத்தா கா... மேலும் பார்க்க

இந்தியாவில் தடுப்பூசி பெறாத குழந்தைகளின் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கை

இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தடுப்பூசி பெறாத (ஜீரோ டோஸ்) குழந்தைகளின் விகிதம் 2023-ஆம் ஆண்டின் 0.11 சதவீதத்திலிருந்து 2024-இல் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளது. குழந்தை இறப்பு மதிப்பீட்டுக்கான ஐ.நா. ... மேலும் பார்க்க

மீண்டும் பயங்கரவாத முகாம்கள் பாகிஸ்தான் கட்டமைப்பதாக உளவுத் துறை தகவல்

இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மூலம் தாக்கி அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்கள் மற்றும் ராணுவத் தளங்களை மறுகட்டமைப்பு செய்யும் பணிகளை பாகிஸ்தான் தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ... மேலும் பார்க்க

இந்தியா மனிதநேயம் சாா்ந்த நாடு: பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா மனிதநேயம் - சேவை சாா்ந்த நாடு; துறவிகள் மற்றும் ஞானிகளின் காலத்தால் அழியாத தத்துவங்களால் உலகின் மிகப் பழைமையான, உயிா்ப்புடன் உள்ள நாகரிகமாக இந்தியா விளங்குகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி பெர... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்பு இறுதி எண்ணிக்கை 260

அகமதாபாத், ஜூன் 28: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 270-ஆக இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், மரபணு பரிசோதனை முடிவுற்ற பின் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 260-ஆக இறுதி ச... மேலும் பார்க்க

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: நடுவா் நீதிமன்றத் தீா்ப்பை நிராகரித்தது இந்தியா

சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீரில் இரு நீா்மின் நிலையத் திட்டங்கள் தொடா்பான விசாரணையை இந்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரில் செயல... மேலும் பார்க்க