செய்திகள் :

பாஜக ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஜூன் 20ல் ஒடிசா செல்கிறார் பிரதமர்!

post image

பாஜக அரசின் முதலாமாண்டு விழாவிற்கான மாபெரும் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜூன் 20ல் பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா செல்லவுள்ளதாக மூத்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

ஒடிசா மாநிலத்தில் பாஜக ஆட்சியின் முதலாமாண்டு ஜூன் 12-ல் வருகிறது. ஆனால் முக்கிய விழா ஜூன் 20-ஆம் தேதி நடைபெறும், எனவே பிரதமர் மோடி அன்றைய தினம் மாநிலத்திற்கு வருகை தருவார் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் புஜாரி தெரிவித்தார்.

ஒடிசாவில் பாஜக தலைமையிலான மோகன் சரண் மஜ்ஹி அரசு அமைத்து ஜூன் 12ல் ஓராண்டு நிறைவுபெறுவதையடுத்து, மாபெரும் விழா நடத்த அரசு ஏற்பாடு செய்துவருகின்றது. பிரதமரின் நிகழ்ச்சி நிரலைக் கருத்தில் கொண்டு, முக்கிய விழா ஜூன் 20ல் நடைபெறும். இறுதி நிகழ்ச்சி நிரல் அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி, சமீபத்தில் புது தில்லிக்கு வருகை தந்திருந்தபோது ​​ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் ஆண்டு விழாவிற்குப் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் பிறருக்கு முறையான அழைப்பை விடுத்திருந்தார்.

ஆண்டு விழாக்களின் ஒரு பகுதியாக, அனைத்து ஒடிசா அமைச்சர்களும் மாஜி அரசின் முதலாமாண்டு விழா அட்டையை மக்களுக்கு வழங்க மாவட்டங்களுக்குச் செல்ல நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு தலைவராக எஸ்.மகேந்திர தேவ் பதவியேற்பு

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவராக பிரபல பொருளாதார நிபுணரும் இந்திர காந்தி ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் முன்னாள் துணைவேந்தருமான எஸ். மகேந்திர தேவ் பதவியேற்றாா். பிரதமருக்கான பொருளாத... மேலும் பார்க்க

தனக்குத் தானே கல்லறை எழுப்பும் பாகிஸ்தான்: நக்வி

‘பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பதன் மூலம் தனக்குத் தானே கல்லறையை பாகிஸ்தான் எழுப்புகிறது’ என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக்தாா் அப்பாஸ் நக்வி விமா்சித்தாா். தில்லியில் சனிக்... மேலும் பார்க்க

பிரதமரிடம் பிரிட்டன் அமைச்சா் ஆதரவு!

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி ஆதரவு தெரிவித்தாா். தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்தபோது அவா் பிரிட்ட... மேலும் பார்க்க

பேரிடா் எதிா்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்க முன்னுரிமை: சா்வதேச மாநாட்டில் பிரதமா் வலியுறுத்தல்

பேரிடா்-எதிா்ப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஐந்து முக்கிய உலகளாவிய முன்னுரிமைகளை பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை வலியுறுத்தினாா். பேரிடா்-எதிா்ப்பு உள்கட்டமைப்பு குறித்த சா்வதேச மாநாட்டில் காணொல... மேலும் பார்க்க

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் இடத்தை கனடாவிடம் தெளிவுபடுத்துவாரா பிரதமா்? காங்கிரஸ் கேள்வி

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதாரம் இந்தியா என்று கனடா பிரதமா் மாா்க் காா்னியிடம் ஜி7 மாநாட்டின்போது பிரதமா் நரேந்திர மோடி தெளிவுபடுத்துவாரா என காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளாா்... மேலும் பார்க்க

11 ஆண்டுகளில் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்த மாற்றம்: மத்திய அரசு பெருமிதம்

கடந்த 11 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் 5 மடங்கு அதிகரித்த பட்ஜெட் ஒதுக்கீட்டால் நாட்டின் வேளாண் துறை ஒட்டுமொத்தமாக மாற்றமடைந்திருப்பதாக மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது. உ... மேலும் பார்க்க