செய்திகள் :

பாஜக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கியது! பிரதமர் உரை!

post image

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கூட்டம் இன்று(ஆக. 5) தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு இக்கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் தில்லியில் நடத்தப்படுகிறது. குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு மனு தாக்கல் தொடங்கும் நாளான ஆக. 7ஆம் தேதிக்கு சில தினங்களுக்கு முன்பு இக்கூட்டம் நடத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.

இத்தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தனது வேட்பாளரை நிறுத்த உள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இக்கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் இருப்பதால் அதன் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என்று கருதப்படுகிறது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தொடர்பாக நடைபெற்ற இரு நாள் விவாதத்தைத் தவிர, நாடாளுமன்றத்தின் தற்போதைய கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக முற்றிலும் முடங்கியுள்ள சூழலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

பிகாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு அனுகூலமானது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தச் சூழலில் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களிடையே பிரதமர் உரை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் பஹல்காம் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்ததற்காக பிரதமரை ஆளும் கூட்டணி எம்.பி.க்கள் பாராட்டிப் பேசுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சட்ட மசோதாக்கள் அரசு நிர்வாகத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதால், தேச நலன் கருதி செவ்வாய்க்கிழமை முதல் இந்த மசோதாக்களை எதிா்க்கட்சிகளின் அமளிக்கிடையே நிறைவேற்ற அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு முன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:ரூ. 75,000 -ஐ நெருங்கும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

A meeting of MPs from the ruling BJP-led National Democratic Alliance (NDA) has begun. Prime Minister Narendra Modi is scheduled to address the meeting.

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

தேசிய தலைநகர் அருகே சட்டவிரோதமாக வசித்துவந்த ஐந்து வங்கதேசத்தினர் செங்கோட்டை அருகே கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். காவல்துறையின் கூற்றுபடி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜூலை 15 முதல் தில்லிய... மேலும் பார்க்க

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

புனேவில் உள்ள புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், கையில் பணமில்லாததால், நடைபாதையில் படுத்துறங்கிய காட்சியும், அவர் நிறுவனத்தின் மீது வைத்திருந்த குற்றச்சாட்டும் சமூக வலைதளத்தில் வைரலாகிய... மேலும் பார்க்க

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒரு மாதத்துக்கும் ம... மேலும் பார்க்க

மறைந்த சத்யபால் மாலிக் பற்றி அறியப்படாத தகவல்கள்!

ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் வாழ்க்கைப் பயணம் என்பது, மாணவர் தலைவராகத் தொடங்கி, அரசியலில் மிகப்பெரிய உயரங்களைத் தொட்டு, லட்சியங்கள், சர்ச்சைகள், அரசியல் சாதனைகளின் பட்டியலுடன் நீள்... மேலும் பார்க்க

மேகவெடிப்பால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரகாசி! 20 விடுதிகள் சேதம்..12 பேர் மாயம்!

உத்தரகண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பால், கனமழை பெய்து ஏராளமான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உத்தரகாசி மாவட்டத்தில், இன்று (ஆக.5) திடீரென உண்டான மேகவெடிப்பால் கனமழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

தில்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது.தில்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்ப... மேலும் பார்க்க