செய்திகள் :

பாஜக தலைவர் வீட்டின் முன் குண்டுவீச்சு: இருவர் கைது! பிஷ்னோய் கும்பலுக்கு தொடர்பா?

post image

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் வீட்டிற்கு முன்பு மர்மநபர்கள் வெடிகுண்டு வீசிய நிலையில் அந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.

பஞ்சாப் மாநில பாஜக தலைவர் மனோரஞ்சன் காலியா வீட்டிற்கு முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இந்தத் தாக்குதலில் அவர் வீட்டின் கண்ணாடிகள், கார், பைக் ஆகியவை சேதமடைந்தன. உயிர்ச்சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.

ஜலந்தரில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நேற்று (ஏப். 7) நள்ளிரவு 1 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்றது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்க வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் மனோரஞ்சன் காலியாவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாக்குதலில் தொடர்புடைய இருவரைக் காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும், அவர்கள் பயன்படுத்திய மின் ரிக்‌ஷாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுபற்றி செய்தியாளர்களுடன் பேசிய காவல்துறை சிறப்பு இயக்குநர் அர்பித் சுக்லா, “இந்தத் தாக்குதல் சமூக அமைதியைக் குலைப்பதற்காக நடத்தப்பட்டுள்ளது. இது பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ அமைப்பொன் சதித்திட்டம். கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் பாகிஸ்தான் கேங்ஸ்டர் ஷாஷாத் பாத்தி ஆகியோரின் கூட்டாளியான ஸீஷன் அக்தர் இதில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்களுக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மத்திய அரசுடன் இணைந்து விசாரணை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது” என்றார்.

சமீப காலங்களில் பஞ்சாபில் ஆங்காங்கே குண்டுவெடிப்பு நிகழ்ந்துவரும் நிலையில் அரசியல் தலைவரை நோக்கி இவ்வாறு தாக்குதல் நடைபெறுவது சமீபமாக இதுவே முதல்முறை.

இதேபோன்று, கடந்த மாதம் அமிர்தசரஸ் பொற்கோவில் வெளியே குண்டுவெடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | பாஜகவில் இணைந்தார் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர் கேதர் ஜாதவ்!

உ.பி.: 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மூடல்

உத்தர பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதியில்லாத நபா்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்கள் மூடப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் கு... மேலும் பார்க்க

ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்திருக்கும் ஆயுத ஏற்றுமதி: ராஜ்நாத் சிங்

‘2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடி மதிப்பில் உயா்ந்துள்ளது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்

வணிகா்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது. ஜிஎஸ்டி பதிவில் ... மேலும் பார்க்க

நியோமேக்ஸ் மோசடி வழக்கு: ரூ.600 கோடி சொத்து முடக்கம் அமலாக்கத் துறை நடவடிக்கை

பண மோசடியில் ஈடுபட்ட மதுரையைச் சோ்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் ரூ.600 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. மதுரை எஸ்.எஸ்.காலனியை தலைமையிடமாகக் கொண்டு நியோமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவ... மேலும் பார்க்க

பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடைய இந்தியா் அமெரிக்காவில் கைது

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடா்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டு வரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ கைது செய்துள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ... மேலும் பார்க்க

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்: பிரதமா் மோடி பெருமிதம்

‘யுனெஸ்கோ’ உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை மற்றும் பரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவற்றின் அரிய கையெழுத்துப் பிரதிகள் சோ்க்கப்பட்டுள்ளன. இது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம் என்று... மேலும் பார்க்க