செய்திகள் :

பாஜக: நடிகர்களுக்குப் போதைப் பொருள் சப்ளை: 'கைதான பிரதீப் உடன் தொடர்பு?' - வினோஜ் P.செல்வம் விளக்கம்

post image

கடந்த சில தினங்களுக்கு முன்பு, நடிகர்களுக்குத் போதைப் பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் பாஜக நிர்வாகி வினோஜ் P.செல்வத்துடன் இருக்கும் போட்டோ வைரலானது.

பிரதீப்புக்கு, வினோத்திற்குத் தொடர்பு உள்ளதா என்ற கேள்வி பரவலாக எழுந்தது. அதற்குப் பதிலளிக்கும் விதமாக, தனது எக்ஸ் பக்கத்தில், வினோஜ் P.செல்வம் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

போதை மருந்து
போதை மருந்து

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...

"எனக்கு முன்பு நன்கு தெரிந்த ஒருவர், போதை மருந்து கடத்தல் வழக்கில் கைதாகி இருப்பது கடந்த மூன்று நாள்களாக எனக்கு மன வருத்தமாக இருக்கிறது. அவர் வெளிநாட்டில் படித்தவர்... மரியதைக்குரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்... ஐ.டியில் பணியாற்றுபவர் ஆவார்.

இது மிகப்பெரிய பிரச்னை ஆகும். தமிழ்நாடு போதை மருந்துகளின் புகலிடமாக ஆவதற்கு முன், இதைச் சரி செய்ய வேண்டும்.

இதற்காக நான் தொடர்ந்து பேசிவருகிறேன்... பிரசாரங்கள் மேற்கொண்டு வருகிறேன். இந்தப் போதைப் பொருள்கள் குடும்பங்களைச் சீரழிப்பதோடு, இளைஞர்களைத் தவறான வழியில் நடத்துகிறது.

இது குறித்து அமைதி காப்பது மிகவும் ஆபத்தானது. இதைப் புறந்தள்ளி விடமுடியாது. இதை எதிர்த்து நாம் சண்டையிட வேண்டும்".

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

PMK : 'எம்.ஜி.ஆரும் அழைத்தார்; கலைஞரும் அழைத்தார்; எங்கும் செல்லவில்லை!' - விரக்தியில் ஜி.கே.மணி

'ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பு!'ராமதாஸூக்கும் அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் பா.ம.கவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத் தோட்டத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். பா.ம.கவ... மேலும் பார்க்க

ராமதாஸ் - அன்புமணி: "இணைப்புக்கான சாத்தியங்கள் குறைகிறதா?" - மருத்துவர் ராமதாஸ் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி

பாமக நிறுவனர் ராமதாஸ் — தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்ட மோதல் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே செல்கிறது. நிர்வாகிகளை ஒருவர் நியமிப்பதும் மற்றொருவர் நீக்குவதுமாக அதிரடிகள் தொடர்கிறது. இந்த பரபரப்பான சூழல... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: "பள்ளிகளிலும் போலீஸ் இருக்கணுமா?" - திரிணாமூல் எம்பி சர்ச்சை பேச்சு

நேற்று முன்தினம், கொல்கத்தா சட்டக் கல்லூரி ஒன்றில், அந்தக் கல்லூரி மாணவி ஒருவரை, அந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இத... மேலும் பார்க்க

CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" - தந்தை குறித்து கவாய்

ட்நாக்பூரில் நடந்த கோர்ட் பார் அசோசியேஷன் நிகழ்வில் இந்திய தலைமை நீதிபதி (CJI) பி.ஆர். கவாய், தான் சட்டம் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தை உணர்வுபூர்வமாகப் பகிர்ந்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவத... மேலும் பார்க்க

BJP: "விசிகவுக்கு எத்தனை தொகுதி கொடுப்பாங்கன்னு முதல்வர்ட்ட கேப்பீங்களா?" - நயினார் நாகேந்திரன்

'நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு!'பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார். திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அவர் பேசி... மேலும் பார்க்க