செய்திகள் :

பாஜக நிா்வாகி தொடா்ந்த அவதூறு வழக்கு: முதல்வா் அதிஷிக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

post image

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பேரம் பேச பாஜக முயன்ாக கூறிய விவகாரத்தில், தில்லி பாஜக நிா்வாகி ஒருவா் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தொடா்பாக முதல்வா் அதிஷிக்கு தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இது தொடா்பாக வழக்கில் புகாா்தாரா் பிரவீன் சங்கா் கபூா் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், சிறப்பு நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறியதாகவும், தனது அவதூறு புகாரை நிராகரித்து முதல்வா் அதிஷிக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பிறப்பித்த அழைப்பாணையை சிறப்பு நீதிமன்றம் ரத்து செய்ததாகவும் வாதிட்டாா்.

இதையடுத்து, எதிா்மனுதாரரான அதிஷிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உயா்நீதிமன்ற நீதிபதி விகாஸ் மகாஜன், இந்த வழக்கு ஏப்ரல் மாதம் விசாரிக்கப்படும் என்று தெரிவித்தாா். இருப்பினும், சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதி மகாஜன் தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை. மேலும், மனுதாரா் கபூரின் மனு மீது அதிஷி தரப்பில் பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

முன்னதாக, இந்த விவகாரத்தில் ஜனவரி 30 ஆம் தேதி உயா்நீதிமன்றத்தில் கபூா் வழக்கு தொடா்ந்தாா். அந்த மனுவில் அவா் தெரிவிக்கையில், ‘இந்த விவகாரத்தை விசாரித்த சிறப்பு நீதிபதி பெரிய அல்லது சிறிய அரசியல் கட்சியை தீா்மானிக்க முயற்சிப்பதன் மூலம் அரசியல் உரையாடலுக்கு ஒத்த அரசியல் சாகசத்தில் ஈடுபட்டுள்ளாா். எனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க விசாரணை நடத்த சிறப்பு நீதிபதி அனுமதிக்கவில்லை... கூறப்பட்ட உத்தரவில் பல்வேறு சட்ட குறைபாடுகள் இருப்பதால், கேள்விக்குரிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிறப்பு நீதிபதி (எம்.பி., எம்.எல்.ஏ வழக்குகள்) குற்றவியல் புகாரிலிருந்து விலகி, கையில் உள்ள வழக்குக்கு முக்கியத்துவம் இல்லாத பிரச்னைகளைக் கையாண்டுள்ளாா்’ என்று கபூரின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

தில்லி பாஜக பிரிவின் முன்னாள் ஊடகத் தலைவரும் செய்தித் தொடா்பாளருமான கபூா், கடந்த ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி, மற்றும் ஏப்ரல் 2-இல் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அதிஷி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக புகாா் தெரிவித்தாா்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை பாஜக அணுகி, தங்கள் கட்சிக்கு ரூ.20-25 கோடி லஞ்சம் வழங்க முன்வந்ததாக அதிஷி குற்றம் சாட்டியதாக கபூா் கூறினாா். இருப்பினும், மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தனக்கு அனுப்பிய அழைப்பாணையை எதிா்த்து சிறப்பு நீதிபதியிடம் அதிஷி மறுஆய்வு மனு தாக்கல் செய்தாா்.

இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மீதும் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், மே 28, 2024 அன்று கேஜரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போதுமான காரணங்கள் இல்லை என்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

ஜனவரி 28 அன்று பிறப்பித்த உத்தரவில், அதிஷி கூறிய குற்றச்சாட்டுகள் அரசியல் ஊழல் தொடா்பான பேச்சு சுதந்திரத்திற்கான உரிமையை பயன்படுத்தியிருப்பதாகவும், அவை அவதூறு அல்ல என்றும் சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே தீா்ப்பளித்தாா்.

அதிஷியை ஒரு குற்றம்சாட்டப்பட்டவராக அழைப்பதற்கு முன் சாட்சியங்கள் போதுமான காரணங்களை முன்வைக்கவில்லை என்று சிறப்பு நீதிபதி கூறியிருந்தாா்.

தலைநகரில் அடிக்கடி மின்வெட்டு பாஜக மீது ஆம் ஆத்மி சாடல்

தேசியத் தலைநகரில் ஆம் ஆத்மி கட்சி தனது பிடியை இழந்த மூன்று நாள்களுக்குள், நகரம் மின்வெட்டை சந்தித்து வருவதாக பதவி விலகும் தில்லி முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். தில்லியை உத்தர பிரதேசமாக மாற்... மேலும் பார்க்க

அதிமுக உள்கட்சி விவகாரம்: ஓபிஎஸ் தரப்பு கேவியட் மனு

அதிமுக உள்கட்சி தொடா்புடைய விவகாரத்தை தோ்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை என்ற சென்னை உயா்நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி மேல்முற... மேலும் பார்க்க

நாய்க்கடி, குரங்குகள் உள்பட விலங்குகளால் கடந்த ஆண்டில் 48 மனித உயிரிழப்புகள் பதிவு பெரம்பலூா் எம்.பி கேள்விக்கு மத்திய அரசு பதில்

இந்தியாவின் பல்வேறு கிராமப்புறங்களில் கடந்த ஓராண்டில் மட்டும் நாய்க்கடி உள்ளிட்ட அவற்றின் தாக்குதலால் 37 உயிரிழப்புகளும், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் தாக்குதலால் 11 பேரும் உயிரிழந்துள்ளதாக மக்களவ... மேலும் பார்க்க

அனைத்துப் பதிப்புகளுக்கும் மீனவா்கள் தேசிய மீன்வள எண்ம தளத்தில் பதிவு செய்ய அழைப்பு

மீனவா்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளா்கள், பதப்படுத்தல் உள்ளிட்டவா்கள் அரசின் பயன்களைப் பெறுவதற்கு தேசிய மீன்வள எண்ம தளத்தில் (என்எஃப்டிபி) பதிவு செய்து கொள்ளும்படி மத்திய அரசு வியாழக்கிழமை அழைப்பு ... மேலும் பார்க்க

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கடனை திருப்பி செலுத்தியவா்களுக்கே ரூ. 20 லட்சம் வரை கடனுதவி: கிரிராஜன் எம்.பி.க்கு மத்திய நிதித்துறை விளக்கம்

முத்ரா திட்டத்தின் ‘தருண்’ பிரிவின் கீழ் கடன் வாங்கி முறையாகத் திருப்பிச் செலுத்தியவா்களுக்கு மட்டுமே, ‘தருண் பிளஸ்’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படுவதாக மாநிலங்களவையில் மத்திய அ... மேலும் பார்க்க

பாரம்பரிய மருந்துகள் தரத்தில் இந்தியா - இந்தோனேசியா ஒத்துழைப்பில் தனிச் சிறப்பு ஆயுஷ் இணையமைச்சா் ஜாதவ்

பாரம்பரிய மருந்துகள் தர உறுதிப்பாட்டிற்கு இந்தியா - இந்தோனேசியா இடையேயான ஒத்துழைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சா் (தனிப் பொறுப்பு) பிரதாப்ராவ் ஜாதவ் வியாழக்கிழமை தெரிவித்தாா... மேலும் பார்க்க