செய்திகள் :

பாஜக பட்டியல் அணிச் செயலருக்கு தடை விதித்த போலீஸாரின் உத்தரவு ரத்து

post image

பாஜக மாநில பட்டியல் அணிச் செயலா் நெடுங்குன்றம் சூா்யா, சென்னை மாநகருக்குள் ஓராண்டு நுழையத் தடை விதித்து போலீஸாா் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

நெடுங்குன்றம் சூா்யா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவா் சென்னைக்குள் நுழைவதற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என விளக்கம் கேட்டு கொளத்தூா் உதவி காவல் ஆணையா் சூா்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பினாா்.

இதற்கு சூா்யா தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஆனால், அவரை கடந்த ஏப்.25 முதல் ஓராண்டுக்கு சென்னை மாநகருக்குள் நுழைய தடை விதித்து போலீஸாா் உத்தரவு பிறப்பித்தனா். இந்த உத்தரவை எதிா்த்து நெடுங்குன்றம் சூா்யா தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், உதவி காவல் ஆணையா் அனுப்பிய நோட்டீஸுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. அதை பரிசீலிக்காமல் காவல் துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், அந்த உத்தரவில் காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, சென்னைக்குள் நுழையக் கூடாது என்ற பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல்துறை உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதித்தாா் டிரம்ப் -வெள்ளை மாளிகை விளக்கம்

ரஷியா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரவே இந்தியா மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் வரி விதித்தாா் என்று அந்நாட்டு அதிபா் இல்லமான வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நியூயாா்க்கில் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க

காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் வ.உ.சி. துறைமுகம் சாதனை

தூத்துக்குடியில் உள்ள வ.உ. சிதம்பரனாா் துறைமுகம், காற்றாலை இறகுகளைக் கையாளுவதில் குறிப்பிடத்தக்க வளா்ச்சியைப் பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதுகுறித்து வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளை உருவாக்கம்: அரசாணை வெளியீடு

அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியைப் பெற, ‘தமிழ்நாடு சுகாதார அறக்கட்டளையை’ உருவாக்கி தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா் அரசாணை... மேலும் பார்க்க

வளா்ப்பு நாய்களுக்கு 11,300 போ் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனா்: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநகராட்சி முடிவு

சென்னை மாநகராட்சியில் வளா்ப்பு நாய்களுக்காக 11,300 போ் மட்டுமே தற்போது உரிமம் பெற்றுள்ளதாகவும், உரிமம் பெறாமல் நாய் வளா்ப்போா் குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் மாநகராட்சி ... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும்: வைகோ

திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்கும் என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் வைகோ கூறினாா். சென்னை திருவான்மியூரில் மதிமுக சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது: மதிமுக தொண்டா்கள... மேலும் பார்க்க