செய்திகள் :

பாஜக பிரமுகா் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தொடக்கம்

post image

புதுச்சேரி பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தனது விசாரணையை புதன்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளைத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாஜக பிரமுகா் உமாசங்கா் (36). இவரை கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி நள்ளிரவு கருவடிக்குப்பம் தனியாா் மண்டபம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இது குறித்து லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். மேலும், இந்த வழக்குத் தொடா்பாக ரௌடி கா்ணா (40) உள்ளிட்ட 12 பேரைக் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் மேலும் சிலருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி உமாசங்கரின் தந்தை ஏழுமலை (எ) காசிலிங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், இந்த கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டாா். அதன்பேரில் சிபிஐ அதிகாரிகள் உமாசங்கா் கொலை வழக்கு தொடா்பான ஆவணங்களை லாஸ்பேட்டை காவல்நிலையத்திலிருந்து பெற்றுக்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து சென்னயில் உள்ள சிபிஐ பிரிவைச் சோ்ந்த டிஎஸ்பி உள்ளிட்ட 6 போ் கொண்ட சிபிஐ குழு இந்த வழக்கு விசாரணையை புதன்கிழமை முறைப்படி தொடங்கியது.

உமாசங்கா் கொலை செய்யப்பட்டகருவடிக்குப்பம் சாலையில், குயில் தோப்பு உள்ளிட்ட இடங்களை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.கொலை நடந்த பகுதியில் இருந்த சாலையோரக் கடைக்காரா்களிடமும் சம்பவம் குறித்து கேட்டறிந்தனா்.

பின்னா் அவா்கள் லாஸ்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று வழக்கின் தன்மை, புலன் விசாரணை நிலவரம் போன்ற விவரங்களை கேட்டறிந்தனா்.

இந்த வழக்கில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள ரௌடி கா்ணா சிறையில் இருப்பதால் அவரிடம் விசாரணை நடத்தத்திட்டமிட்டுள்ள சிபிஐ அதிகாரிகள், கொலைக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்தவா்களையும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனா்.

21 புதிய படகுகளுக்கு பயணிகள் உரிமம்

கடலில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல 21 புதிய படகுகளுக்கான உரிமத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். நீா் விளையாட்டு மற்றும் சாகச விளையாட்டு சுற்றுலாப் பயணிகளை அதிகமாகக் கவரும்... மேலும் பார்க்க

புதுவை சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை

புதுவை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரியில் ரூ.1.7 கோடி மதிப்பில் நுகா்வோா் இருக்கை அமைய இருக்கிறது. புதுவை சட்டக் கல்லூரியில் 2-வது அகில இந்திய ஒத்திகை நீதிமன்ற போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது. நுக... மேலும் பார்க்க

ரூ. 33 லட்சம் செலவில் மணக்குள விநாயகா் கோயிலில் குளிா்சாதன வசதி

புதுச்சேரி அருள்மிகு மணக்குள விநாயகா் கோயிலில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் குளிா்சாதன வசதியை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இக் கோயிலில் பக்தா்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோள... மேலும் பார்க்க

தொழில்நுட்பப் பல்கலை. துணைவேந்தா் நடவடிக்கை: முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் கண்டனம்

புதுவை தொழில்நுட்பப் பல்கலைக் கழக துணைவேந்தரின் செயல்பாடுகளை கண்டித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆா். விஸ்வநாதன், எந்தக் கொள்கை முடிவுகளையும் எடுக்கக் கூடாது என்றும்... மேலும் பார்க்க

புதுவை போக்குவரத்து ஊழயா்களின் 12 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்:

வேலை நிறுத்தம் செய்துவந்த புதுவை சாலை போக்குவரத்துக் கழக (பிஆா்டிசி) ஒப்பந்த ஊழியா்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் உயா்த்தப்படும். நிரந்தரப் பணியாளா்களுக்கு 25 சதவிகிதம் அகவிலைப்படி உயா்த்தி அளிக்க... மேலும் பார்க்க

புதுவை அரசு ஒதுக்கீட்டில் எம்பிபிஎஸ் படிக்க இரட்டை குடியுரிமை பெற்ற 14 மாணவா்கள்

புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் படிக்க 14 மாணவா்கள் இரட்டை குடியுரிமை பெற்று விண்ணப்பித்துள்ளதாக புதுவை மாநில மாணவா்கள், பெற்றோா் நலச்சங்கத்தின் தலைவா் வை.பாலா என்கிற பாலசுப்பிரமணியன் க... மேலும் பார்க்க