செய்திகள் :

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

post image

ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடந்து கொண்ட விதம் சரியா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. ஓவலில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் வெற்றி பெற்று இந்த தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக, ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளருக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது. இது குறித்து பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.

கௌதம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா?

ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சற்று தன்மையாக பேசியிருக்கலாம் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

Matthew Hayden
மேத்யூ ஹைடன்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆடுகளம் சேதமடையக் கூடாது என்பதில் மேற்பார்வையாளர்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள். இங்கிலாந்தில் ஆடுகள மேற்பார்வையாளர்கள் சற்று கடுமையாகவே இதனை பின்பற்றுவர். ஆனால், கௌதம் கம்பீர் சற்று தன்மையாக பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். ஆனால், மிக முக்கியமான இறுதிப்போட்டிக்காக இந்திய அணி பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பது அவரது கவலையாக இருந்தது என்பதும் உண்மை என்றார்.

ஆடுகளத்தில் இருந்து 5 மீட்டர் விலகி நின்று பார்க்குமாறும், ஆடுகளத்தை சேதப்படுத்த வேண்டாம் எனவும் மேற்பார்வையாளர் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதற்கு பதிலளித்த கௌதம் கம்பீர், நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் கூற வேண்டிய அவசியமில்லை. உங்களுக்கு அந்த உரிமை இல்லை. நீங்கள் ஒரு சாதராண ஆடுகள மேற்பார்வையாளர் மட்டுமே எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

Former Australian cricketer Matthew Hayden has spoken out about whether Indian head coach Gautam Gambhir's behavior towards the Oval's pitch supervisor was appropriate.

அறிமுக வீரர் அசத்தல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்ற... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் புதிய கிரிக்கெட் திடல்..! 80,000 இருக்கைகள்!

கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார். கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாந... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் நம்.3இல் களமிறங்கி, ... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; நியூசிலாந்து 476 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க