செய்திகள் :

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

post image

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் நம்.3இல் களமிறங்கி, ஆஸி. முதல்முறையாக டி20யில் கோப்பை வெல்ல அவர் உதவினார்.

33 வயதாகும் மிட்செல் மார்ஷ் தற்போது ஆஸி. டி20 அணிக்கு கேப்டனாக செயல்படுகிறார்.

சமீபத்திய மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலும் தொடக்க வீரராக களமிறங்கினார். 5-0 என தொடரை வென்றதும் குறிப்பிடத்தக்கது.

தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்

அடுத்ததாக, ஆஸி. அணி தென்னாப்பிரிக்காவுடன் டி20 தொடர் விளையாடவிருக்கும் நிலையில், மிட்செல் மார்ஷ் கூறியதாவது:

நானும் டிராவிஸ் ஹெட்டும் வருங்காலங்களில் தொடக்க வீரராக விளையாடுவோம் என எதிர்பார்க்கிறோம்.

அதிகமாக நாங்கள் ஒன்றாக விளையாடி இருக்கிறோம். அதனால், எங்களுக்கு நல்ல பழக்கம் இருக்கிறது.

உலகக் கோப்பை வரவிருப்பதால் அனைத்து வீரர்களையும் எந்த இடத்தில் வேண்டுமானால் விளையாட தளர்வாக இருக்கும்படி அறிவிப்பு வந்துள்ளது.

பந்துவீசமாட்டேன், ஆனால்...

தற்போதைக்கு நான் பந்துவீசப் போவதில்லை. ஆனால், அது நிரந்தரம் இல்லை. தற்போது ஒவ்வொரு தொடராக முன்னேறுவோம். எங்களுக்கு அதிகமான ஆப்ஷன்கள் இருக்கின்றன.

இன்னும் உலகக் கோப்பைக்கு முன்பாக15 போட்டிகள் உள்ளன. எங்களுக்கு தேவையான பாணியை இதில் உருவாக்குவோம். இதில், ஒவ்வொரு நொடியும் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் விளையாடுவோம் எனக் கூறினார்.

மிட்செல் மார்ஷ் 206 டி20 போட்டிகளில் 5,133 ரன்கள் எடுத்துள்ளார்.

Captain Mitchell Marsh has confirmed he will open the batting alongside Travis Head for the "foreseeable future" as Australia lock in a key combination ahead of next year's T20 World Cup.

அறிமுக வீரர் அசத்தல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் ... மேலும் பார்க்க

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடந்து கொண்ட விதம் சரியா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.இந்தியா மற்... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்ற... மேலும் பார்க்க

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் புதிய கிரிக்கெட் திடல்..! 80,000 இருக்கைகள்!

கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார். கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாந... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; நியூசிலாந்து 476 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க