செய்திகள் :

பெங்களூரில் ரூ.1,650 கோடி செலவில் புதிய கிரிக்கெட் திடல்..! 80,000 இருக்கைகள்!

post image

கர்நாடகத்தில் அமைக்கப்படும் புதிய கிரிக்கெட் திடல் குறித்து முதல்வா் சித்தராமையா கலந்தாலோசித்துள்ளார்.

கர்நாடக வீட்டுவசதி வாரியம் அளித்த முன்மொழிவை முதல்வர் சித்தராமையா ஏற்றுக்கொண்டுள்ளார். அதில், மாநிலத்துக்கான விளையாட்டு காம்ப்ளக்ஸ், 80,000 பேர் உட்கார்ந்து பார்க்ககூடிய கிரிக்கெட் திடலும் அடங்கியிருக்கின்றன.

பொம்மசந்திராவில், சூர்யா சிட்டி புறநகர் பகுதியில் இந்த கிரிக்கெட் திடல் அமையவிருக்கிறது.

இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கிரிக்கெட் திடலாக இது அமையவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது பெரிய கிரிக்கெட் திடல்

முன்னதாக குஜராத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியம்தான் அதிகமான பார்வையாளர்கள் (1.32 லட்சம்) உட்காரும் இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சின்னசாமி திடலில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் நிகழ்ந்த 11 உயிரிழப்புகள் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனை விசாரித்த மைக்கேல் குன்ஹா இந்தத் திடல் வெறுமனே 32,000 பேர் மட்டுமே பார்க்க முடியும். அதிகமானோர் கூடுவதற்கு ஏற்றதல்ல என அறிக்கையை தாக்கல் செய்தார். அதனால், புதிய இடத்துக்கு திடலை மாற்றும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

100 ஏக்கர் பரப்பளவில்... ரூ.1,650 கோடி செலவில்

இந்தத் திட்டத்துக்கு 100 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.1,650 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது.

மாநில அரசின் உதவி இல்லாமல் கர்நாடக வீட்டுவசதி வாரியமே இதனை செய்து முடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தத் திடலில் 8 இன்டோர், அவுட்டோர் விளையாட்டுகள், பயிற்சிக்கான வசதிகள், விடுதிகள், நீச்சல்குளம், நிக்ழ்சிகளுக்கான மேடைகள் என உருவாக்கப்படவிருக்கிறது.

இது மட்டுமில்லாமல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் விதமாகவும் ஸ்போர்ட்ஸ் சிட்டியை உருவாக்க வேண்டும் எனவும் அந்தக் கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

அறிமுக வீரர் அசத்தல்; ஒருநாள் தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.பாகிஸ்தான் அணி மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3... மேலும் பார்க்க

ஆஷஸ் தொடரில் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் ... மேலும் பார்க்க

ஆடுகள மேற்பார்வையாளரிடம் கம்பீர் நடந்துகொண்ட விதம் சரியா? மேத்யூ ஹைடன் கூறுவதென்ன?

ஓவல் திடலின் ஆடுகள மேற்பார்வையாளரிடம் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் நடந்து கொண்ட விதம் சரியா என்பது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் பேசியுள்ளார்.இந்தியா மற்... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவை 359 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 359 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்ற... மேலும் பார்க்க

டி20 உலகக் கோப்பை: தொடக்க வீரர்களாக ஹெட், மார்ஷ்!

டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் களமிறங்குவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் மிட்செல் மார்ஷ் நம்.3இல் களமிறங்கி, ... மேலும் பார்க்க

2-வது டெஸ்ட்: மூவர் சதம் விளாசல்; நியூசிலாந்து 476 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி 476 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.நியூசிலாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்ட... மேலும் பார்க்க