செய்திகள் :

பாஜக Ex.MLA வீட்டில் IT ரெய்டு; முதலைகளைக் கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி... வனத்துறை வழக்குப்பதிவு!

post image

வருமான வரித்துறையினர் சோதனைக்கு சென்ற இடத்தில் முதலைகள் மற்றும் பிற ஊர்வனவற்றை செல்லபிராணியாக வளர்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மத்திய பிரதேசம் மாநிலம், சாகர் மாவட்டத்தில் வசிக்கிறார் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஹர்வன்ஷ் சிங் ரத்தோர். இவரது வீடு மற்றும் இவருக்கு தொடர்புடைய இடங்களிலும், பீடி தயாரிப்பாளர் மற்றும் கட்டட காண்ட்ராக்டரான ராஜேஷ் கேஷாவானிக்கு சொந்த இடங்களிலும் கடந்த ஞாயிறு முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10-ம் தேதி அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்ட போது, ரத்தோரின் வீட்டில் முதலை மற்றும் பிற ஊர்வனவற்றை வளர்ப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

வனத்துறைக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டதும், அதிகாரிகள் விலங்குகளை மீட்டுள்ளனர்.

இது குறித்து மத்திய பிரதேச வனப் படையின் தலைவர் அசீம் ஸ்ரீவஸ்தவா ஊடகங்களில் பேசுகையில், "இந்த விவகாரம் தொடர்பாக வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலைகளின் உடல் நலம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நீதிமன்றத்தில் தெரிவித்து, மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவோம்." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலைகள் பிடிபட்ட வீட்டின் உரிமையாளர் ரத்தோர் தானா என்பதை வனத்துறை அதிகாரி உறுதிபடுத்தவில்லை. எத்தனை முதலைகள் மற்றும் என்னென்ன விலங்குகள் கிடைக்கப்பெற்றன என்பதையும் வெளியில் தெரிவிக்கவில்லை.

கரூர்: பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; போக்சோவில் காவலர் கைது; நடந்தது என்ன?

கரூர் நகரக் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வருபவர் நெரூர் ரங்கநாதன்பேட்டை பகுதியைச் சேர்ந்த இளவரசன் (வயது 41). இவர், பணி நிமித்தமாக வெங்கமேடு காவல் நிலை... மேலும் பார்க்க

"போலீஸ் கண் முன்னாடியே வெட்டி கொன்னுட்டாங்களே..." - பெரம்பலூரை உலுக்கிய படுகொலை சம்பவம்

பெரம்​பலூர் மாவட்டம், வேப்​பந்​தட்டை வட்டம் கை.களத்​தூர் காந்தி நகரைச் சேர்ந்​தவர் மணிகண்​டன்​ (வயது 32). அதே பகுதியைச் சேர்ந்​தவர் தேவேந்​திரன்​ (வயது 30). இருவரும் அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவர் வைத்... மேலும் பார்க்க

ரவுடியுடன் பொங்கல் விழா கொண்டாடிய 3 போலீஸார்... ஆயுதப்படைக்குத் தூக்கியடித்த திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி `சமத்துவ பொங்கல் விழா’ கொண்டாடப்பட்டது.இதில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி, அஜித்குமார் மற்றும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உமாபதி உள்பட... மேலும் பார்க்க

வேலூர்: "குளிக்கிறப்ப வீடியோ கால் பண்ணு..." - மாணவியிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது

வேலூர் கொணவட்டம் மதினாநகரைச் சேர்ந்தவர் முகமது சானேகா (35). இவர் தனியார்ப் பள்ளி ஒன்றில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரிடம் மாலை வீட்டுக்குச்... மேலும் பார்க்க

கியர்பாக்ஸ் முதல் டயர் வரை மாயம் - ஸ்டேஷன் பாதுகாப்பில் இருந்த விவசாயியின் பறிமுதல் வாகன பரிதாபம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள சோலூர் கோக்கால் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி நாகராஜ். கடந்த 2020 - ம் ஆண்டு அந்த பகுதியில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், அருகில் இருக்கும் தனியாருக்கு ... மேலும் பார்க்க

ஈரோடு: பைக்கில் அதிவேக பயணம்... சாலை விபத்தில் இன்ஸ்டா பிரபலம் உயிரிழப்பு

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல யூ டியூப் மற்றும் இன்ஸ்டா பிரபலமான ராகுல். இவர் நேற்று இரவு, கவுந்தப்பாடி பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்... மேலும் பார்க்க