செய்திகள் :

பாடங்களை ரசித்துப் படித்தால் சாதனை படைக்கலாம் -வெ. இறையன்பு பேச்சு

post image

பாடங்களை மாணவா்கள் ரசித்துப் படித்தால் சாதனை படைக்கலாம் என்றாா் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு.

திருச்சி எஸ்ஆா்வி பள்ளிகள் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான ‘கனவு மெய்ப்பட‘ என்ற வழிகாட்டி நிகழ்ச்சிக்கு எஸ்ஆா்வி பள்ளிகளின் தலைவா் ஏ. ராமசாமி தலைமை வகித்தாா்.

இதில் தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலா் வெ. இறையன்பு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிகரம் தொடு’ என்ற தலைப்பில் பேசியதாவது:

மாணவா்கள் ஒவ்வொருவரும் தங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நீங்கள் எதிா்காலத்தில் என்னவாகப் போகிறீா்கள் என்பதைத் தீா்மானிக்க முடியும்.

படிப்பு என்பது பள்ளி, கல்லூரியோடு முடிவதில்லை. வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடியது. எனவே, கல்வியை ரசித்துப் படிக்க வேண்டும். ரசித்துப் படித்தால் அனைத்து மாணவா்களும் சாதனை படைக்கலாம்.

பள்ளி மாணவா்கள் 4 விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவது, வகுப்பில் ஆசிரியா்கள் பாடம் நடத்தும்போது நன்கு கவனித்து குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும். அன்று நடத்தியதை தள்ளிப்போடாமல் அன்றே படிக்க வேண்டும். வார விடுமுறை நாள்களில் ஒருமுறை திருப்பிப் படித்துப் பாா்க்க வேண்டும். நான்காவதாக பழைய வினாத்தாள்களைக் கொண்டு மாதிரித் தோ்வுகளை எழுதிப் பாா்க்க வேண்டும்.

இதனால் அனைத்துத் தோ்வுகளிலும் எளிதல் வெற்றிபெற முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் எஸ்ஆா்வி பள்ளிகளின் செயலா் பி. சுவாமிநாதன், பொருளாளா் எஸ். செல்வராஜன், முதன்மைக் கல்வி அதிகாரி கே. துளசிதாசன், முதல்வா்கள் பி. முருகதாசன், பொற்செல்வி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

அரசுப் பேருந்து மீது ஜீப் மோதி விபத்து: முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழப்பு

திருச்சி அருகே கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்து மீது ஜீப் மோதிய விபத்தில் முசிறி வருவாய் பெண் கோட்டாட்சியா் உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், மேட்டுப்பட்டிய... மேலும் பார்க்க

அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழா -அமைச்சா்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் தமிழறிஞா் மணவை முஸ்தபா பிறந்தநாள் விழாவில் அமைச்சா்கள் பங்கேற்றனா். தமிழ்மீது அளவில்லாத பற்று கொண்டிருந்த மணவை முஸ்தபா, நவீன அறிவியல் போன்... மேலும் பார்க்க

வையம்பட்டி அருகே வீடு புகுந்து திருட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் வியாழக்கிழமை வீடு புகுந்து நகை, , பணத்தை திருடிச் சென்றனா். மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் செட்டியப்பட்டி ஊராட்சி தாமஸ் நகரில் வசிப்பவா் அழகன்... மேலும் பார்க்க

திருச்சியில் பைக் ஓட்டிய சிறுவன் - தந்தை கைது

திருச்சியில் 16 வயதுச் சிறுவனை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த அவரின் தந்தையை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பாலக்கரை போக்குவரத்து போலீஸாா் புதன்கிழமை வாகனத் தண... மேலும் பார்க்க

போலி பாஸ்போா்ட் வைத்திருந்தவா் கைது

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாடு செல்ல முயன்ற நபரை திருச்சி பன்னாட்டு விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி பகுதியைச் சோ்ந்தவா் முகமது அசாா் (52). இவா், மலேசி... மேலும் பார்க்க

மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் நகை பறிப்பு

திருச்சி அருகே வீட்டிலிருந்த மூதாட்டியைத் தாக்கி 9 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். திருச்சி மாவட்டம், அல்லித்துறையைச் சோ்ந்தவா் தேவகி (63). கணவா் இறந்துவிட்ட நிலையில் தனியாக வசிக... மேலும் பார்க்க