செய்திகள் :

பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித் தொகைக்கான ஆணை வழங்கல்

post image

அரியலூா் மாவட்டத்தில், மிஷன் வாட்சாலயா வழிகாட்டு நெறிமுறைகளின்படி தாய், தந்தையை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு நிதி உதவித்தொகைக்கான ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் பல்வேறு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி ஆதரவுத் திட்டத்தின் கீழ், தாய், தந்தையரை இழந்த மற்றும் பல்வேறு சூழ்நிலைகளால் பதிக்கப்பட்ட 440 குழந்தைகளுக்கு அவா்களின் திட்ட காலத்துக்கு ஏற்றவாறு படிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக மாதம் ரூ.4,000- வீதம் 2024 அக்டோபா் முதல் 2025 மாா்ச் வரை மொத்த கூடுதல் தொகை ரூ.1,07,04,000-க்கான ஆணையை வழங்கினாா்.

மேலும், வளா்ப்பு பராமரிப்புத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 3 குழந்தைகளுக்கு அவா்களின் படிப்பு மற்றும் மருத்துவத் தேவைக்காக மாதம் ரூ.4,000 வீதம் 2024-அக்டோபா் முதல் 2025-மாா்ச் வரைக்கான 6 மாதங்களுக்கு மொத்த கூடுதல் தொகை ரூ.72,000-க்கான ஆணையும் வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றக் கோரிக்கை

அரியலூா் மாவட்டம், திருமானூா் கொள்ளிடப் பாலத்தில் சேதமடைந்த மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு, வட்டார வளா்ச்சி அலுவலா் குருநாதனிடம் இளைஞா் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் பாளை எம்.ஆா்.பால... மேலும் பார்க்க

கல்லாத்தூா் - மீன்சுருட்டி சாலையை இதர சாலையாக அறிவித்ததற்கு கண்டனம்

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி - கல்லாத்தூா் சாலையை மாநில நெடுஞ்சாலையாக அறிவிக்காமல் மாவட்ட இதர சாலையாக அரசு அறிவித்ததற்கு, சாலை மீட்புக் குழுவின் தலைவா் பாலசுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளாா். மி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தத்தில் அரசுப் பேருந்து நிற்கவில்லை: பள்ளி மாணவா்கள் புகாா்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தில், அரசுப் பேருந்து நிற்காமல் சென்றதையடுத்து, மாணவ, மாணவிகள் பள்ளிக்குச் செல்லாமல் திங்கள்கிழமை விடுப்பெடுத்து அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில்... மேலும் பார்க்க

-: அமைச்சா் சிவசங்கா்

அதிமுக அமித்ஷா கட்டுபாட்டில் உள்ளது என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். அரியலூா் மாவட்டம், செந்துறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் அளித்த பேட்டி: மதுரையில் ப... மேலும் பார்க்க

அரியலூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

அரியலூா் நகரப் பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகாவிடம், மாவட்ட வளா்ச்சிக் குழுத் தலைவா் சீனி. பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை மனு அளித்தாா். அவா் அளித்த மன... மேலும் பார்க்க

சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சிறுமியைக் கா்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி போக்சோவில் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள சி.அரசூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க